தவிப்பு

தலைகோதும் என் தாயே ;
தவிக்க விட்டுசென்றாயே !
உன் வரவை நான் நோக்க ;
உரக்கத்திலே வருவாயா !

தூரம் சென்ற என் தாயே ;
துக்கம் களைய வாராயோ !
கண்ணீரும் நிற்கவில்லை ;
கவலை போக்க வாராயோ !

செப்பாய் நான் இருந்தாலும் ;
தங்கமாய் எனை காண்பாயே !
தங்குமிடம் அத்தனையும் ;
தனிமையிலே தவிக்கின்றன !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (30-Oct-22, 2:06 am)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
Tanglish : thavippu
பார்வை : 562

மேலே