ஸலவாத்

பெயரைச்சொல்லி மகிழ்கின்றோம் அவர்
பெயரால் ஸலவாத் ஓதுகின்றோம் !
கண்களை போல காக்கின்றோம் அவர் பெயருக்கு
களங்கம் வராது போற்றுகின்றோம் !

கண்ணியம் தந்து படுகின்றோம் .. அவர்
காலடித்தடத்தை தேடுகின்றோம் !
கண்மணி நாயகம் காண்பதற்கு அவர்
பெயரால் ஸலவாத் ஓதுகின்றோம் ! (ஸல்லல்லாஹு...)

நபிகளாரின் ஆசைப்படி ,
நாயன் அருளை பெறவேண்டி :
நாளும் நாங்கள் பாடுகின்றோம் !
நல்ல ஸலவாத் தினமும் ஓதுகின்றோம் !

பூமான் நபியின் மனம் குளிர ;
புகளுக்குரியவன் அருளவேண்டி :
நாளும் நங்கள் போற்றுகின்றோம் ;
நல்ல ஸலவாத் அதனை ஓதுகின்றோம் (ஸல்லல்லாஹு ......)

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (23-Oct-22, 3:52 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 38

மேலே