எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
//வெண்பா எனும்பா மிகவும் எளிதுதான்
www .facebook .com /kayalvenba
www . kayalvenba .blogspot .com
முதன் முதலாக முறுக்கிய மீசை......
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு
ஒரு ஆனந்தக் களிப்புப் பாடல்
வந்திடு வீர்வரு வீரே - நலம்
தந்திடும் யோகம் தான்செய்யு வீரே
கைகளைக் கால்களை நீட்டி - உடல்
கவினுற வேதான் கலைகளுங் காட்டி
வைகறை செய்வது யோகம் - இதை
வந்தனை செய்தால் வாராது சோகம் !
பொய்களை யாக்கையில் நீக்கி - வெறும்
பொல்லாமை தன்னை மனத்தினில் போக்கி
செய்கையைச் செய்வது யோகம் - இதைச்
செய்பவர் வாழ்வினில் இன்பம்முப் போகம் !
சக்கரம் உள்ளது ஏழு - அதை
சரியில்நி றுத்த யோகத்தில் வாழு
அக்கறை கொண்டவன் சொன்னேன் - இதை
அவசியம் கேட்பாய் என்செல்லக் கண்ணே !
முக்திநி லைகாண வேண்டில் - சொலும்
முதுநெறி யோகம் யாண்டுமே வேண்டும்
சிக்கிய சேதிக ளெல்லாம் - கவிச்
சிறுவனும் சொன்னேன் யோகத்தால் வெல்வோம் !
வித்தக இளங்கவி
விவேக்பாரதி
அன்பு பாவலர் மார்களே...வணக்கம்...
சில தினங்களுக்கு முன்பு நமது தளத்தில் கன்னியப்பன் தாத்தா இட்டிருந்த பதிவினைப் பார்த்தேன் "சட்கோண பந்தம்" குறித்து பதிவு செய்திருந்தார். அதிலே அவர் பதிவேற்றியிருந்த படத்திற்கான கவிதை வடிவினைக் கேட்டார்..பின்பு அவரே கண்டறிந்து பதிவும் செய்தார். வெண்பா எழுதத் தெரிந்த அணைத்து புலவர்களும் மிகவும் சுலபமாக "சட்கோண பந்தம்" எழுதலாம். இதோ இலக்கணங்கள் தருகிறேன் கூடவே நான் இட்டிருக்கும் படத்தில் உள்ளவாறு வார்த்தைகளை அடுக்கினால் "சட்கோண பந்தம்" தயார்..
இதோ இலக்கணங்கள்...
1) வெண்பாவின் தளைகள் ஏதும் தட்டாமல் ஓசை நயம் மாறாது அமைதல் வேண்டும்.
2) 2-4-6-8-10-12 ஆகி (...)
எனது முதல் COLLAGE
வள்ளுவன்; கம்பனொடு; பாரதியும்; தாசனும்;
தெள்ளுதமிழ் கண்ணதாசன்; வாலியும்; வைரமுத்தும்
நன்நாமுத் துக்குமார்; தாமரையும் கார்க்கியும்
நன்றாய்க் கபிலனையும் பார் !
-விவேக்பாரதி
பூரிப்பின் உச்சத்தில் என்மனம் பறந்திடச், செய்வதறியாது திகைத்து நிற்கின்றேன் தங்கள் முன்னால். துபாய் தமிழர்சங்கம் நடாத்திய "இது ஒரு கவிக்காலம்" என்னும் உலகளாவிய கவிதைப் போட்டியில் பங்கேற்று முதலிடம் என்னும் முத்தன இடத்தை வென்றுள்ளேன். ஏதும் அறியாத இந்தச் சின்னப் பயலுக்கு முதல் பரிசாகக் 4 கிராம் தங்கக் காசுகள் கொடுத்ததோடு அல்லாமல் "வித்தக இளங்கவி" என்னும் பட்டம் வேறு வழங்கிஉள்ளது. :) எனக்கு இத்தகு பெரும் அங்கீகாரத்தை வழங்கிய துபாய் தமிழர் சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிப் பூக்களை உதிர்க்கிறேன். என்னை இவ்வளவு உயர்த்திய மாஞ்சா நூற்களான எனது ஆசான்களையும் பாதம் பணிந்து போற்றுகிறேன்.
-விவேக்பாரத (...)
அம்மாவும் நானும்
அம்மாவைக் கட்டியபடி நானும் இங்கே
---ஆனந்தம் ததும்பிடவே நிற்கின் றேனே
சும்மாநான் விளையாட்டாய் எடுக்கச் சொன்ன
---சுமாரான புகைப்படத்தின் எழிலைப் பாரீர்
அம்மாடி நானுமிதை நம்ப வில்லை
---அப்படியோர் அழகுஇந்த புகைப்ப டத்தில்
எம்மாதா பராசக்தி இதுபோல் என்றும்
---எப்போதும் இருந்திடவே அருளைத் தாராய் !
-விவேக்பாரதி
மலைக்கோட்டை உச்சியில் நிற்கின்றேன் நானும்
நிலையாக நல்லருள் சாற்றும் - சிலைவடிவத்
தேவன் விநாயகன் பார்வை கிடைத்ததே !
மேவ வருமோ பழி !
எனதண்ணன் அபியின் சிறப்பான வாழ்த்துக் கவிதை நேரான பார்வைக்கு