செவல்குளம் செல்வராசு - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : செவல்குளம் செல்வராசு |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 15-Apr-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 256 |
புள்ளி | : 74 |
#குவிகம் கலை இலக்கிய மாத இதழில் (2020 ஜூன்) வெளிவந்த கவிதைகள்
சூப்பர் மார்க்கெட் கவிதைகள்
----------------------------------------------
1. கடை கடையாக
கையேந்தும் மூதாட்டியிடம்
ஒரு அழுகல் கனியைக்
கொடுக்கச் சொல்கிறார்
முதலாளி
2. மூன்று வகை திராட்சைகளிலும்
ஒவ்வொன்று எடுத்து
ருசித்துப் பார்த்தேன்
ச்சீ.. ச்சீ... இந்த பழம்
புளிக்கிறது
3. எதற்கெடுத்தாலும்
என்னையே அழைக்கிறார்
‘கண்மணி கண்மணி’ என்று
வெகு உரிமையாக.
சம்பளம் வாங்கிய உடன்
வேறு கடைக்கு மாறவேண்டும்
4. ராணி அக்கா
நேற்று இரவு அழுதுகொண்டே
கடையை விட்டுப் போனாள்
இன்று புதிதாக ஒரு
பதின் பரு
கோடை - கவிதை – செவல்குளம் செல்வராசு
குவிகம் இலக்கிய இதழில் (மே 2020) பிரசுரமான கவிதை
கோடைச் சூரியன் உமிழ்ந்த
ஒட்டுமொத்த வெயிலையும்
வெக்கையாய்க் கீழிறக்கிக்கொண்டிருக்கிறது
ஓட்டு வீடு.
தூங்க முடியாமல்
முதுகு நனைந்து படுத்துக்கிடக்கையில்
எப்படியோ வந்து தொலைத்தது ஆசை.
“கடைசியா பங்குனி உத்திரத்து அன்னைக்கு...
பத்து நாள் ஆச்சு”
மெதுவாகத் தொட்டுத் திருப்பிய விரல்களுக்கு
கிளர்ச்சிவயப்பட்டு
மெதுவாக மேலேறிப் படர்ந்தபோது
‘சொத்தென’ முதுகில் விழுந்தது ஏதோவொன்று.
பதறியபடி உதறி எழுந்து பார்த்தபோது
‘சின்னவ’ தலைமாட்டில் கிடந்தது
செந்தேள்க் குஞ்சொன்று.
முத்தக் காலம் - கவிதை – செவல்குளம் செல்வராசு
காற்றுவெளி இலக்கிய இதழில் (வைகாசி 2020) பிரசுரமான கவிதைகள்
1. தப்ப வழியின்றி என்
கைச்சிறைக்குள் மாட்டிக்கொண்ட போது
செல்லமாய்க் கேட்டாய்
“கால நேரம் வேண்டாமா?” என்று
முத்தத்திற்கேது கால நேரம்
நாம் முத்தமிட்டுக் கொள்ளும் காலம்
முழுவதும் முத்தக்காலம் தான்
இனிதே துவங்கியது இன்றைய முத்தக்காலம்
2. உன் முத்தத்திற்காக
நான் ஆடிய சதுரங்கத்தில்
என் எல்லா காய் நகர்த்தல்களையும்
எளிதாக தோற்கடித்து விட்டு
எதிர் வீட்டு குழந்தைக்குக் கொடுக்கிறாய்
எனக்கான முத்தங்களை இரட்டிப்பாக
என்னிடம் சேர்க்கச் சொல்லி
முத்தக் காலம் - கவிதை – செவல்குளம் செல்வராசு
குவிகம் இலக்கிய மாத இதழில் ஏப்ரல் 2020 பிரசுரமான கவிதைகள்
1. நம் முதல் திருமண நாளன்று
காலையில் ஒரு பந்தயம் வைத்தாய்
அன்று பகல் முழுவதும்
என் பெயரை
நீ எத்தனைமுறை அழைக்கிறாயோ
அத்தனை முத்தங்கள்
இரவில் நான் தரவேண்டும் என்றாய்
நான் வெற்றி பெற்றால்
நீ நூறு முத்தங்கள் தருவதாகவும்
தோல்வியுற்றால் அபராதமாய்
நான் ஐம்பது முத்தங்கள் தர வேண்டும்
என்றும் நிர்ணயித்தாய்
மொத்தத்தில் அன்றிரவு
முத்தத்தில் நிறைந்தது
2. பனிப்பொழிவு துவங்கியிருந்த
ஓர் மார்கழி அந்தியில் சொன்னாய்
“ஒரு பந்தயம்”
“சொல் இப
காணொளி வடிவம் காண https://youtu.be/32JzWxuJGVI
1 காதல்
ஓர் அட்சய பாத்திரம்
இதில் கவிதைகள் குறைவதேயில்லை…
2. எனக்காகத்தானே உன்னில் படைக்கப்பட்டிருக்கிறது
ஏன் மறைக்கிறாய்
உன் உதட்டுச் சுழிப்பில் புன்னகையை
3. சூரியன் விழிக்காத
ஓர் மார்கழிக் காலையில்
நீ கோலமிட்டுக் கொண்டிருந்ததையும்
கவனிக்க நேரமின்றி
ஏதோ ஒரு நேர்முகத்தேர்விற்காக
அவசரத்தில் பறந்தபோது
அறியாது கோலத்தை மிதித்துவிட்டு
அசடு வழிந்து நின்றேன்
அன்றிலிருந்துதான் நீ என்னை
தண்டித்துக் கொண்டிருக்கிறாய்
அன்றிலிருந்து கோபப் பார்வையிலும்
இன்றுமட்டும் ஏனோ
என்னைப் பார்க்க ம
பாரதியை சபிக்கிறேன்!
ஏன் மூட்டினாய்
இவ் வேள்வித் தீயை?
கனன்று கொண்டிருக்கும்
எங்கள் ஏக்கங்களில்
ஏன் தெளித்தாய்
உன் சத்தியத்தை?
மறத்துப் போன
எங்கள் உடல்
என்ன தீங்கிழைத்தது உனக்கு?
சமையலறை தான்
சர்வமும் என்றால்
அங்கனமே மடிந்திருப்போமே!
கனவுகள் மட்டுமே
சாத்தியம் என்றால்
சளைக்காமல் கண்டிருப்போமே!
விலங்கினை உடைத்து
சிறகுகள் விரித்தால்
சிகரம் எட்டலாமென
பொய்யுரைத்தீரோ?
தத்திப் பறக்க முயலும்
சிட்டுக் குருவி
எப்படியும் ஒருநாள்
நத்தைபோல் ஓட்டுக்குள்
சுருண்டு விடப் போகிறதெனில்
ஏட்டுச் சுரைக்காயா
நீர் சமைத்த அறம்?
பெருங்கனவு பொசுங்கிவிட்ட
ப
சாதியற்ற தமிழர் காவியற்ற தமிழகம்
01/06/2018அன்றுசாதியற்ற தமிழர் காவியற்ற தமிழகம் கவியரங்கம் – பாடலரங்கில்
வாசித்த கவிதை
இடம் : தமுஎகச கைலாசபுரம் கிளை, திருச்சி
சரித்திரத்தில் மூத்த குடி
சரித்திரங்கள் பல பூத்த குடி
சமத்துவமாய் வாழ்ந்த குடி
சாட்சியங்கள் பல உண்டு
குரங்கின் வழித்தோன்றல் மனிதன்
கூற்று இது உண்மை எனில்
குரங்கிலில்லாச் சாதி _ நம்
கூட்டத்திலே புகுந்ததெப்படி ?
ஆதியிலே சாதியில்லை
கீழடித
சக உயிர் மாண்டால்
சகித்து கொள்கிறோம்!
உரிமைகள் பறித்தால்
ஊமையாகிறோம்!
தோட்டாக்கள் நெஞ்சில் தைக்க
நம் மக்கள் நிலம் சரிந்தால்
என்ன செய்தோம் நாம்?!
கோர காட்சிகளென
முகம் திருப்பி கொண்டோம்!
வரிகள் ஏய்த்தான்!
அவன் வெள்ளையன் அல்லவே
வாய் மூடி கொண்டோம்!
விலை உயர்த்தினான்!
சட்டைப்பையில் காந்தி சிரித்தார்
நமக்கென்ன
பெருமூச்சிட்டோம்!
உணவில்லை என்றான்!
மீண்டும் சிரித்தார்
துரித உணவகம் சென்று
அலுத்து கொண்டோம்!
அழ வைத்தான் அழுதோம்!
சிரி என்றான் சிரித்தோம்!
நீ நீயில்லை என்பான்!
சிரித்து கொண்டே
ஆம் என்போம்!
மானம் தொலைக்க சொல்வான்
நொடியில் செய்வோம்!
வீரம
1 காதல் எனக்கிடும்
எல்லா ஆணைகளின் இறுதியிலும்
அவள் பெயரே மிளிர்கின்றன
கையொப்பமாய்
2 நிலவைக் காட்டி சோறூட்டுகிறாய்
பக்கத்து வீட்டு குழந்தைக்கு
பசிக்கிறது எனக்கு(ம்)
3 நீ செல்லக் கோபம் கொண்டிருந்த
ஓர் காலையில்
‘உன் கோபம் பிடித்திருக்கிறது’ என்றேன்
‘உன் தூபம் பிடிக்கவில்லை’ என்றாய்
‘உன் கொலுசொலி பிடிக்கும்
கொஞ்சம் நட’ என்றேன்
கழட்டி கையில் பொத்திக்கொண்டு
பழிப்பு காட்டி சிரித்தாய்
‘இந்தச் சிரிப்பும் பிடித்திருக்கிறது’
உடனே மௌனமானாய்
‘உன் துப்பட்டாவும் பிடித்திருக்கிறது’
அப்போது உண்மையாகவே
நீ கோபம்கொண்டாய்