அன்பு

பட்டை போடப் போடத்தான்
பளப ளக்கும் வைரமே;
மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான்
மினுமி னுக்கும் தங்கமே;
அரும்பு விரிய விரியத்தான்
அளிக்கும் மணத்தை மலருமே;
அன்பு பெருகப் பெருகத்தான்
அமைதி அடையும் உலகமே!


கவிஞர் : அழ. வள்ளியப்பா(2-Nov-11, 2:56 pm)
பார்வை : 294


மேலே