உற்றநோய் நீக்கி உறாஅமை - பெரியாரைத் துணைக்கோடல்

குறள் - 442
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

Translation :


Cherish the all-accomplished men as friends,
Whose skill the present ill removes, from coming ill defends.


Explanation :


Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen.

எழுத்து வாக்கியம் :

வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

நடை வாக்கியம் :

வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று.

பொருட்பால்
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில்.

காமத்துப்பால்
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
மேலே