என்ன நடக்கிறது இங்க

நல்லதமிழ் வளர நான் கண்ட தலமென்று நானும் இங்கு இணைந்தேன் .வாயற்ற ஊமை கண்ட காட்சிதனை செவிடரிடத்தில் விவரித்த கதை போலே நற்கவிகள் மௌனித்து பார்வையற்று தவிக்குதிங்கு அய்யகோ !இங்கும் அரசியல் காழ்புணர்ச்சி முளைத்திட கண்டு என் மனம் வெதும்புதிங்கு சிலர் கவிக்கு கருத்துமழை பலர் கவியை குருடாக்கி ...பாசமான நட்பென்றால் பெய்யும் மழை பொய்க்கும் .உய்யும் கவி யாதென்று பிரித்து பார்க்க ஆளின்றி தொய்யும் தமிழ் .மதிப்பின் அடிப்படையில் சிறந்த கவி இதுவென்று தேர்ந்தெடுப்பது முறையா ?நல்லாசான் யாருமின்றி கல்விபயில்வது சரியா ?குறை திருத்த யாரும் முன்வருவதில்லை அதைதவிர்த்து ஆஹா !ஓகோ !புகழாரம் சூட்டுகின்ற சகமனிதரே
தமிழ் பிழை கண்டு கண் மூடி கிடப்பதேன் ?



கேட்டவர் : புதிய பாரதி
நாள் : 18-Sep-14, 10:33 pm
0


மேலே