திருக்குறள்
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு
இலக்கண விதிகளின் படி குறள் வெண்பாவில் அதிகபட்சம் இருக்கக்கூடிய 20 அசைகள்
இந்தக் குறளில் உள்ளன.
இவ்வாறு 20 அசைகள் உள்ள குறள் வெண்பா இது ஒன்று மட்டுமே என்பதாலும் , இது
கல்வியின் அவசியத்தைச் சொல்லுவதாலும் திருவள்ளுவர் கல்வி தான் தலையாயது என்று
சொல்வதாக நாம் எடுத்துக்கொள்ளலாமா?