தமிழ் கவிஞர்கள்
>>
சுப்பிரமணிய பாரதி
>>
வேதாந்தப் பாடல்கள் ஜய பேரிகை
வேதாந்தப் பாடல்கள் ஜய பேரிகை
ஜய பேரிகை கொட்டடா -- கொட்டட
ஜய பேரிகை கொட்டடா! (ஜய)
சரணங்கள்
பயமெனும் பேய்தனை யடித்தோம் -- பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்.
(ஜய பேரிகை) 1
இரவியி னொளியிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம். (ஜய பேரிகை) 2
காக்கை, குருவி எங்கள் ஜாதி -- நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம். (ஜய பேரிகை) 3
[பாட பேதம்]: ?துன்பப்?
பா. க.-8
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
