பிரம்ம ஸ்துதி

ஓ மெனப் பெரியோர் கள்-என்றும்
ஓதுவ தாய் வினை மோதுவ தாய்,
தீமைகள் மாய்ப்பது வாய்,-துயர்
தேய்ப்பது வாய்,நலம் வாய்ப்பது வாய்,
நாமமும் உருவும் அற்றே-மனம்
நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்,
ஆமெனும் பொருளனைத் தாய்,-வெறும்
அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்;

நின்றிடும பிரமம்என் பார்;-அந்த
நிர்மலப் பொருளினை நினைத்திடு வேன்;
நன்றுசெய் தவம் யோகம்-சிவ
ஞானமும் பக்தியும் நணுகிட வே
வென்றி கொள்சிவ சக்தி-எனை
மேவுற வே,இருள் சாவுறவே,
இன்தமிழ் நூலிது தான்-புகழ்
ஏய்ந்தினி தாயென்றும் இலகிட வே.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 2:10 pm)
பார்வை : 12


மேலே