கவிமாமணி, பொற்கிழிக் கவிஞர் சவகர்லால் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிமாமணி, பொற்கிழிக் கவிஞர் சவகர்லால்
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  26-May-1936
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jun-2011
பார்த்தவர்கள்:  102
புள்ளி:  28

என்னைப் பற்றி...

தமிழ்ப் பேராசிரியர், முதல்வர் ( ஓய்வு );
படிப்பு; எம்.ஏ., பி.டி.,பிஎச்.டி.,

என் படைப்புகள்
கவிமாமணி, பொற்கிழிக் கவிஞர் சவகர்லால் செய்திகள்

அழகென்னும் தெய்வம்

பூத்திருக்கும் மலரசைவில், கீழை வானில்
புலர்ந்திருக்கும் கதிரொளியில், மாலை வாசல்
காத்திருக்கும் கண்ணசைவில், தலையைத் தூக்கிக்
கவிழ்ந்திருக்கும் சேயசைவில், நீர்க்கு டத்தைச்
சேர்த்திருக்கும் இடுப்பசைவில், தெறித்த நீரில்
திளைத்திருக்கும் உடலசைவில், கவிதை சிந்தி
ஆர்த்திருக்கும் பெண்ணசைவில் மனங்கொ டுத்தேன்;
அழகென்னும் தெய்வத்தின் அடிமை யானேன்.

காலையிளங் கதிரவனை எழுப்பும் சேவற்
கரகரத்த குரலினிலே அழகைக் கண்டேன்.
சோலையிளந் தளிரினையே ஆட்டி வைக்கும்
சுகமான தென்றலிலே அழகைக் கண்டேன்.
காளையினத் திமிர்நடையில், அதைந டத்தும்
கட்டுறுதித் தோளசைவில், அழகைக்

மேலும்

மிக மிக அருமையான கவிதை சொற்கள் தமிழில் பூத்த வண்ணம் மாறா மலர்கள் போல் வருடல் வளரும் பிறை போல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2015 6:11 am

அழகென்னும் தெய்வம்

பூத்திருக்கும் மலரசைவில், கீழை வானில்
புலர்ந்திருக்கும் கதிரொளியில், மாலை வாசல்
காத்திருக்கும் கண்ணசைவில், தலையைத் தூக்கிக்
கவிழ்ந்திருக்கும் சேயசைவில், நீர்க்கு டத்தைச்
சேர்த்திருக்கும் இடுப்பசைவில், தெறித்த நீரில்
திளைத்திருக்கும் உடலசைவில், கவிதை சிந்தி
ஆர்த்திருக்கும் பெண்ணசைவில் மனங்கொ டுத்தேன்;
அழகென்னும் தெய்வத்தின் அடிமை யானேன்.

காலையிளங் கதிரவனை எழுப்பும் சேவற்
கரகரத்த குரலினிலே அழகைக் கண்டேன்.
சோலையிளந் தளிரினையே ஆட்டி வைக்கும்
சுகமான தென்றலிலே அழகைக் கண்டேன்.
காளையினத் திமிர்நடையில், அதைந டத்தும்
கட்டுறுதித் தோளசைவில், அழகைக்

மேலும்

மிக மிக அருமையான கவிதை சொற்கள் தமிழில் பூத்த வண்ணம் மாறா மலர்கள் போல் வருடல் வளரும் பிறை போல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2015 6:11 am

பார்க்காதே !

வண்ணத்துப் பறவைகள் விளையாடும் பூங்காவில்
எண்ணத்தில் இளையமகன் என்ன செய்திடுவான் ?

வண்ணத்தைப் பார்ப்பான்; வடிவழகைத் தான்பார்ப்பான்;
எண்ணத்தில் அழியாத கோலங்கள் வரைந்திடுவான்.

பார்வையே தீனியெனப் பருவம் வளர்கையிலே
பார்க்காதே எனச்சொன்னால் பாவம் பிறக்காதா ?

அன்புக் கையணைப்பில் அருமை மனைவிவர
இன்பமுடன் கடைத்தெரு எல்லாம் அளக்கின்றான்.

நடமாடும் பாவையர்தம் நளினம் மெருகேறி
இடையசைவில் இனியதொரு நாடகம் நடக்கிறது.

கையணைப்பில் மனைவி; கண்வலையில் கயல்மீன்கள்.
அய்யோ ! பாவமிவன் அகத்திலொரு மீன்குப்பம்.

பார்வையிலே ஏதோ ஏக்கம் தீர்ப்பவனைப்
பார்க்காதே ! எனச்சொன்னால் பாவம் பிறக்கா

மேலும்

அருமையான சொல்லாடல் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Nov-2015 10:00 am

அமைதி

அமைதியினைத் தொலைத்துவிட்டோம்; பொறுப்பில் லாமல்
ஆற்றினிலே போட்டுவிட்டுக் குளத்தில் தேடி
அமைதியினைக் காணாமல் நொறுங்கு கின்றோம்;
அகத்துளேஓர் இருட்குகையில் கிடந்த பூதம்
நமதுள்ளம் கிழித்தெறிந்தே ஆர்ப்ப ரித்து
நடுநடுங்க வைப்பதனைக் காணு கின்றோம்.
அமைதியெங்கே எனத்தேடி வாடு கின்றோம்;
அதுஎங்கே? உள்ளேயா? வெளியி லேயா?

நெஞ்சுக்குள் பூகம்பம் வெடிக்கும் போது
நினைவுக்குள் சுழற்காற்றே அடிக்கும் போது
பஞ்சுக்குள் நெருப்பைப்போல் ஏற்றத் தாழ்வு
பற்றிக்கொண் டபலைகளை எரிக்கும் போது
மிஞ்சிநிற்கும் செல்வத்தால் ஏழை மக்கள்
மிதிபட்டுத் தெருவெல்லாம் கதறும் போது
கிஞ்சித்தும் த

மேலும்

கவிதை

எதுகவிதை எனச்சற்றே சிந்தித் தால்நாம்
ஏதேதோ சொல்லிடலாம்; நெஞ்சுக் குள்ளே
மெதுவாக, இனிமையாக, ஆழ மாக
மெல்லிசைபோல் நுழையவேண்டும்; பின்ன ராங்கே
மதுமயக்கம் நிகழவேண்டும்; கவிதைச் சொற்கள்
வரிசைநட மிடவேண்டும்; கேட்போர் நெஞ்சுள்
அதுநுழைந்தால் நற்கவிதை ; இல்லை யென்றால்
அணிவகுத்த சொற்கூட்டம்; அவ்வ ளவ்வே.

பளிச்சென்றே ஒருமின்னல் தோன்ற வேண்டும்;
பாதாளக் குகைக்குள்ளும் அதுபு குந்து
வெளிச்சத்தைப் பாய்ச்சவேண்டும்; கற்போர் நெஞ்சுள்
விதம்விதமாய்ப் பலசுவைகள் மலர வேண்டும்;
கலகத்துப் பூண்டுகளை எரிக்க வேண்டும்;
கற்பனையில் வானவில்லே த

மேலும்

நல்ல சிந்தனை ஐயா... கவிதைக்குள் கவிதை சொல்லி விட்டீர்கள்... மிக சிறந்த எண்சீர் விருத்தங்கள் ஐயா.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Nov-2015 4:33 pm
ஆஹா உள்ளத்தில் தோன்றி நினைவுகளில் கலந்து வாழ்க்கையில் அழியாத அனுபவ எழுத்து கவிதை வானமென்ற காகிதத்தில் நிலவும் தாரகையும் மரபு வானவில் புதுமை தூவல் மழை ஹைக்கூ 23-Nov-2015 10:55 am
மேலும்...
கருத்துகள்

மேலே