Kalaimagal - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kalaimagal
இடம்:  Villupuram
பிறந்த தேதி :  15-May-1970
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Jan-2020
பார்த்தவர்கள்:  16
புள்ளி:  0

என் படைப்புகள்
Kalaimagal செய்திகள்
Kalaimagal - எண்ணம் (public)
21-Jan-2020 1:40 pm

பெண்ணே பெண்னண போற்றிடு


பெண்ணே  நீ
போற்றிடு!
பெண்ணை நீ
போற்றிடு!
பேதமை காட்டாது
பெருமையாய்
போற்றிடு பெண்ணை!

மகளாய் வந்திட்ட
மருமகளை நீ
மாசு கானாது
மனசு நோகாது
மங்கலமாய் வாழ்த்திடல்
மேன்மையே!

வன்சொற்களால்
வசைபாடாது
வன்செயலினை
வருத்தாது நீர்
வாழ்ந்திடு-பெண்ணே
வளமான வாழ்வினை!

போற்றா விட்டாலும் நீயோ
பெண்ணாய் வந்தவளை
பொன்னாய் மதிந்திடு!

தூய்மை வார்த்தைகளை
தூண்டிலாக்கி
தொய்யாது மனதை
தாலாட்டு!

செந்தேனாய்
செவ்வரிகளாய் பெண்ணே
செதுக்கிடு-நீ
செம்மை வாழ்வு
சித்திரமே-இருவருக்கும்!

மருமகளே நீயும்
மாமியாரை எண்ணிடு
மற்றோர் தாயாய்!

குறை சுட்டிக்காட்டினால்
நிறை யாக்கு!
வன் சொல் பேசுகையில்
வன்மையை மென்மையாக்கு!

வெறுப்பு காட்டாது
நட்பு காட்டு!
நிலைக்கும் உறவு முறை
நெருப்பாய் அல்ல
நரகமாய் அல்ல
நட்பாய்!

பாதரசமாய் ஒட்டாது
பந்தங்களை நீயோ
பதராக்காதே!

மருமகள்-மாமியார்
       உறவோ
முறியாது என்றும்
மனமொத்து வாழ
மல்யுத்தம் செய்யாது
மனக்கசப்பை மறந்து
மற்றொரு தாயாய்
மனமொத்து எண்ணிடு!
வேற்றுமகளாய் எண்ணாது
வேதனை தீர்ப்பவளாய் எண்ணிடு!
வாழ்வோ வசந்தமாகுமே!
வசந்தமாகுமே!

         பா.கலைமகள்
          விழுப்புரம்.

மேலும்

Kalaimagal - எண்ணம் (public)
21-Jan-2020 12:14 pm

      கல்லறைக்குள் கதறல்

முத்தாய் உனை ஈன்று
முத்தார மாய் வளர்த்து
மாணிக்க தொட்டியி லிட்டு
மகனே உனை வளர்த்தேனே!

உடன் பிறந்த சகோவை
உபாதை யென எண்ணாது
உயிராய் எண்ணிடு என்றுமே
உடன் பிறப்பு என்பதால்!

தமக்கை யெனும் உன்
தென்றலை மறவாது வாழ்ந்திடு!
தீஞ்சுவை சொற்களை பேசாது
தேனாய் பேசிடு அவளிடம்!

 தமக்கை யெனும் உறவை
தவறி கூட மறவாது
தரணி-யில் நீ 
தங்க மகனாய் வாழ்ந்திடு!

சகோவை உன் வாழ்வின்
சுமையாய் எண்ணாது வாழ்ந்திட்டால்
சமாதி யில் எனதுறக்கம்
சொர்க்க மாய் இருந்திடுமே!

பொன் பொருள் பணத்தால்
பிரிவினை வராது வாழ்ந்திடு
பாசமெ னும் வேலியை
போர்வை யாக்கி வாழ்ந்திடு!

பெரிய வனெனும் மா
பாதக கர்வம் வேண்டாமே!
பவித்ர உலகில் நீயோ
பொன் மகனாய் வாழ்ந்திடு!

கல்லறை யில் எனது
கதறல் உனது செவியில்
கேளாது உனது செயலெனக்கு
கண்ணீரை தராது வாழ்ந்திடு!

பாச மெனும் வலையை
பின்னிடு மகனே மகளே!
பூரிப்படைந்  திடுமே எனதுள்ளம்!
புறங்கா ட்டில் தூங்கிடும்

எனக்கு வேண்டுமே மகனே
என்றும் உங்களின் கூட்டுவாழ்வு!
எத்த னாய் வாழாது
ஏலாதி மணமாக வாழ்ந்திடுக!

       பா.கலைமகள்
       விழுப்புரம்.

மேலும்

Kalaimagal - Kalaimagal அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2020 8:42 pm

   பொங்கிடு தமிழா புலியாக


தமிழ்மொழியினை தள்ளிவைத்து
வேற்றுமொழி மோகங்கொண்டு
நாகரீக போர்வை போர்த்தி
நடமாடும் தமிழனை...

செந்தமிழை பேசிடும்
செல்லக்குழந்தையினை வையும்
செருக்கு பெற்றோரை
காண்கையில்

குடியரசு நாளினையும்
சுதந்திர நாளினையும்
மறந்தே திரிந்திடும்
மனிதனெனும் மாஇடரை...

தமிழ்தாய் வாழ்த்தினை
தேசியகீதத்தை அவமதிக்கும்
அகக்கொண்ட தமிழனை....

தமிழ்மொழி நசுக்கும்
தனிமனிதனை நீ
கண்டிட்டால் அவனின்
கன்னத்தில் அறைந்திடு..

பெட்டியினில் உறங்கும்
பாம்பாய் இராது
பொங்கிடு! தமிழா
புலியாய்!

புலியாய் புறப்பட்டு
புயலாய் சீற்றத்தோடு
புவியினரை மாற்றிடு
பைந்தமிழை காத்திடு!

       பா.கலைமகள்
       விழுப்புரம்.

மேலும்

Kalaimagal - எண்ணம் (public)
19-Jan-2020 8:42 pm

   பொங்கிடு தமிழா புலியாக


தமிழ்மொழியினை தள்ளிவைத்து
வேற்றுமொழி மோகங்கொண்டு
நாகரீக போர்வை போர்த்தி
நடமாடும் தமிழனை...

செந்தமிழை பேசிடும்
செல்லக்குழந்தையினை வையும்
செருக்கு பெற்றோரை
காண்கையில்

குடியரசு நாளினையும்
சுதந்திர நாளினையும்
மறந்தே திரிந்திடும்
மனிதனெனும் மாஇடரை...

தமிழ்தாய் வாழ்த்தினை
தேசியகீதத்தை அவமதிக்கும்
அகக்கொண்ட தமிழனை....

தமிழ்மொழி நசுக்கும்
தனிமனிதனை நீ
கண்டிட்டால் அவனின்
கன்னத்தில் அறைந்திடு..

பெட்டியினில் உறங்கும்
பாம்பாய் இராது
பொங்கிடு! தமிழா
புலியாய்!

புலியாய் புறப்பட்டு
புயலாய் சீற்றத்தோடு
புவியினரை மாற்றிடு
பைந்தமிழை காத்திடு!

       பா.கலைமகள்
       விழுப்புரம்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே