சுகுமார் தபெ சுப்பிரமணியம் SHUGUMAR - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுகுமார் தபெ சுப்பிரமணியம் SHUGUMAR |
இடம் | : தைப்பிங்,பேராக்.மலேசியா. |
பிறந்த தேதி | : 19-Jul-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Oct-2021 |
பார்த்தவர்கள் | : 14 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
கவிதை புனைவதில் ஆர்வம்
என் படைப்புகள்
சுகுமார் தபெ சுப்பிரமணியம் SHUGUMAR செய்திகள்
சுகுமார் தபெ சுப்பிரமணியம் SHUGUMAR - சுகுமார் தபெ சுப்பிரமணியம் SHUGUMAR அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Nov-2021 1:56 pm
பட்டம்
பட்டம் பாரு... பட்டம் பாரு...
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...
வண்ண வண்ண பட்டம் பாரு...
வானில் வழியைத் தேடும் பாரு...
கண்ணைக் கவரும் பட்டம் பாரு...
காற்றில் மிதக்கும் பட்டம் பாரு...
பட்டம் பாரு... பட்டம் பாரு...
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...
நூலின் நுனியில் பறக்கும் பாரு...
நூறு கண்கள் வியக்கும் பாரு...
வாலை அசைத்து உயரும் பாரு
வானம் முட்டும் பட்டம் பாரு...
பட்டம் பாரு... பட்டம் பாரு...
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...
வானில் பட்டம் பறக்கும் பாரு...
வந்த கவலை மறக்கும் பாரு...
சேனை போல சிறுவர் பாரு...
சின்ன பட்டம் விடுவர் பாரு...
பட்டம் பாரு... பட்டம் பாரு...
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...
பட்டம் போல உயர நினைத்து
பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்து
பட்டப் படிப்பை நீயும் நாடு...
பதவி புகழுடன் உயர்ந்து வாழு...
பட்டம் பாரு... பட்டம் பாரு...
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...
ஆக்கம் சு.சுகுமார்(19.11.2021)
பட்டம்
பட்டம் பாரு... பட்டம் பாரு...
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...
வண்ண வண்ண பட்டம் பாரு...
வானில் வழியைத் தேடும் பாரு...
கண்ணைக் கவரும் பட்டம் பாரு...
காற்றில் மிதக்கும் பட்டம் பாரு...
பட்டம் பாரு... பட்டம் பாரு...
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...
நூலின் நுனியில் பறக்கும் பாரு...
நூறு கண்கள் வியக்கும் பாரு...
வாலை அசைத்து உயரும் பாரு
வானம் முட்டும் பட்டம் பாரு...
பட்டம் பாரு... பட்டம் பாரு...
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...
வானில் பட்டம் பறக்கும் பாரு...
வந்த கவலை மறக்கும் பாரு...
சேனை போல சிறுவர் பாரு...
சின்ன பட்டம் விடுவர் பாரு...
பட்டம் பாரு... பட்டம் பாரு...
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...
பட்டம் போல உயர நினைத்து
பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்து
பட்டப் படிப்பை நீயும் நாடு...
பதவி புகழுடன் உயர்ந்து வாழு...
பட்டம் பாரு... பட்டம் பாரு...
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...
ஆக்கம் சு.சுகுமார்(19.11.2021)
சுகுமார் தபெ சுப்பிரமணியம் SHUGUMAR - சுகுமார் தபெ சுப்பிரமணியம் SHUGUMAR அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Nov-2021 7:50 am
சாந்தம்
ஓயா அலைகள் கடலிலே………..
எண்ண அலைகள் மனதிலே………..
ஓய்ந்த அலைகள் அனுபவமே………..
எண்ண அலையின் முடிவிலே………..
சாந்தம் சாந்தி …
சமய நியதி…
அன்னல் காந்தி…
போற்றும் அமைதி…
காலம் கடந்த உண்மை…
கனவில் கண்ட உண்மை…
அன்பே உந்தன் மென்மை…
என்னை கவர்ந்த பெண்மை…
இறைவன் படைப்பின் அதிசயம்…
இப்படியும் உருவம் கொடுத்தானே…
இறைவா நன்றி ஆயிரம்…
இப்படியும் கவிதை உருவானதே…
என்னே உந்தன் விந்தை…
என்னுள் இருக்கும் நாதா…
என்னை இயக்கும் இறைவா…
தீருமோ எந்தன் கடனே…
கீதை பாதை ஆனதே…
கீதம் நாதம் நீயே…
மீதம் ஏதும் உண்டோ…
மிஞ்சி நிற்கும் இறைவா…
பாடல் ஆடல் பயின்றேன்…
பட்டம் பெற்று உயர்ந்தேன்…
பயின்ற கல்வி நிறைவில்லை…
படைத்த உன்னை மறந்தாலே…
அம்மா நெஞ்சம் உருகுது…
அப்பா என்று சொல்லுது…
அம்மை அப்பன் என்னுள்ளே…
ஆனந்தம் என்றும் மனதிலே…
ஆதி அந்தம் அறிந்தவனே…
அறிவை எனக்குக் கொடுத்திடவே...
அன்பு பக்தி கொண்டேனே…
அள்ளி அணைப்பாய் அன்பினிலே…
கற்பனை ஊற்று கொட்டுது…
கவிதை எழுதத் தூண்டுது…
கண்ட கண்ட வார்த்தையேல்லாம்…
கவிதையாக மாறுது…
நெஞ்சம் இழுத்துப் பிடிக்குது…
நில்லா எண்ணம் பறக்குது…
நிலவே உன்னை நெறுங்குது…
நினைத்ததையேல்லாம் எழுதுது…
கொட்டுது கொட்டுது கவிதையிலே…
சொட்டுச் சொட்டுச் சொல்லினிலே…
சோகம் என்பது எனக்கில்லை…
சொந்தம் நீ என்று ஆனதுமே…
சின்னச் சின்னக் கண்களிலே…
சீறிய வார்த்தைகள் கவிதையிலே…
சீற்றம் பெற்ற வாக்கியமே…
கவிதை என்ற உருவமே…
மைகள் தீர்ந்து கொட்டியதே…
கவிதை என்ற உருவிலே…
கற்ற எந்தன் மனதிலே…
கவிகள் கொஞ்சி விளையாடியதே…
கவிதை கவிதை கவிதை…
கொட்டுது கொட்டுது கொட்டுது…
அள்ளு அள்ளு என்றது…
அதுவே கவிதை ஆனது…
சுற்றும் முற்றும் பார்க்கையிலே…
சுற்றும் உலக பாதையிலே…
சாந்தம் வேண்டி நினைக்கையிலே…
சாந்தி…..சாந்தி…..சாந்தியே…..
ஆக்கம் : திரு.சு.சுகுமார் (10.11.2021)
சாந்தம்
ஓயா அலைகள் கடலிலே………..
எண்ண அலைகள் மனதிலே………..
ஓய்ந்த அலைகள் அனுபவமே………..
எண்ண அலையின் முடிவிலே………..
சாந்தம் சாந்தி …
சமய நியதி…
அன்னல் காந்தி…
போற்றும் அமைதி…
காலம் கடந்த உண்மை…
கனவில் கண்ட உண்மை…
அன்பே உந்தன் மென்மை…
என்னை கவர்ந்த பெண்மை…
இறைவன் படைப்பின் அதிசயம்…
இப்படியும் உருவம் கொடுத்தானே…
இறைவா நன்றி ஆயிரம்…
இப்படியும் கவிதை உருவானதே…
என்னே உந்தன் விந்தை…
என்னுள் இருக்கும் நாதா…
என்னை இயக்கும் இறைவா…
தீருமோ எந்தன் கடனே…
கீதை பாதை ஆனதே…
கீதம் நாதம் நீயே…
மீதம் ஏதும் உண்டோ…
மிஞ்சி நிற்கும் இறைவா…
பாடல் ஆடல் பயின்றேன்…
பட்டம் பெற்று உயர்ந்தேன்…
பயின்ற கல்வி நிறைவில்லை…
படைத்த உன்னை மறந்தாலே…
அம்மா நெஞ்சம் உருகுது…
அப்பா என்று சொல்லுது…
அம்மை அப்பன் என்னுள்ளே…
ஆனந்தம் என்றும் மனதிலே…
ஆதி அந்தம் அறிந்தவனே…
அறிவை எனக்குக் கொடுத்திடவே...
அன்பு பக்தி கொண்டேனே…
அள்ளி அணைப்பாய் அன்பினிலே…
கற்பனை ஊற்று கொட்டுது…
கவிதை எழுதத் தூண்டுது…
கண்ட கண்ட வார்த்தையேல்லாம்…
கவிதையாக மாறுது…
நெஞ்சம் இழுத்துப் பிடிக்குது…
நில்லா எண்ணம் பறக்குது…
நிலவே உன்னை நெறுங்குது…
நினைத்ததையேல்லாம் எழுதுது…
கொட்டுது கொட்டுது கவிதையிலே…
சொட்டுச் சொட்டுச் சொல்லினிலே…
சோகம் என்பது எனக்கில்லை…
சொந்தம் நீ என்று ஆனதுமே…
சின்னச் சின்னக் கண்களிலே…
சீறிய வார்த்தைகள் கவிதையிலே…
சீற்றம் பெற்ற வாக்கியமே…
கவிதை என்ற உருவமே…
மைகள் தீர்ந்து கொட்டியதே…
கவிதை என்ற உருவிலே…
கற்ற எந்தன் மனதிலே…
கவிகள் கொஞ்சி விளையாடியதே…
கவிதை கவிதை கவிதை…
கொட்டுது கொட்டுது கொட்டுது…
அள்ளு அள்ளு என்றது…
அதுவே கவிதை ஆனது…
சுற்றும் முற்றும் பார்க்கையிலே…
சுற்றும் உலக பாதையிலே…
சாந்தம் வேண்டி நினைக்கையிலே…
சாந்தி…..சாந்தி…..சாந்தியே…..
ஆக்கம் : திரு.சு.சுகுமார் (10.11.2021)
சுகுமார் தபெ சுப்பிரமணியம் SHUGUMAR - சுகுமார் தபெ சுப்பிரமணியம் SHUGUMAR அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Nov-2021 4:30 pm
எலிப் பாட்டு
எலி வருகுது எலி வருகுது ஓடி வா பாப்பா…..
வலையை விட்டு வெளியில் வருகுது ஓடி வா பாப்பா…
சந்து பொந்து நுழைந்து வருது ஓடி வா பாப்பா…..
சொந்த பந்தம் அழைத்து வருது ஓடி வா பாப்பா…..
குள்ள நரியின் குணததைப் பார்க்க ஓடி வா பாப்பா......
கள்ளம் கொண்ட எலிவருகுது ஓடி வா பாப்பா…..
மெல்ல மெல்ல எலிவருகுது ஓடி வா பாப்பா…
பல்லில் நூலைக் கடித்திடும் ஓடி வா பாப்பா.....
கள்ள எலிகள் பயத்தில் ஓடும் ஓடி வா பாப்பா…
உள்ளம் கொண்ட வீரததோடு ஓடி வா பாப்பா.....
சின்னஞ் சிறிய நடைகள் போட்டுப் பார்க்க வா பாப்பா…..
சின்னஞ் சிறிய எலியின் பாட்டு பாடி வா பாப்பா…..
எலி வருகுது எலி வருகுது ஓடி வா பாப்பா…..
வலையை விட்டு வெளியில் வருகுது ஓடி வா பாப்பா…
ஆக்கம் சு. சுகுமார் (18.10.2021)
எலிப் பாட்டு
எலி வருகுது எலி வருகுது ஓடி வா பாப்பா…..
வலையை விட்டு வெளியில் வருகுது ஓடி வா பாப்பா…
சந்து பொந்து நுழைந்து வருது ஓடி வா பாப்பா…..
சொந்த பந்தம் அழைத்து வருது ஓடி வா பாப்பா…..
குள்ள நரியின் குணததைப் பார்க்க ஓடி வா பாப்பா......
கள்ளம் கொண்ட எலிவருகுது ஓடி வா பாப்பா…..
மெல்ல மெல்ல எலிவருகுது ஓடி வா பாப்பா…
பல்லில் நூலைக் கடித்திடும் ஓடி வா பாப்பா.....
கள்ள எலிகள் பயத்தில் ஓடும் ஓடி வா பாப்பா…
உள்ளம் கொண்ட வீரததோடு ஓடி வா பாப்பா.....
சின்னஞ் சிறிய நடைகள் போட்டுப் பார்க்க வா பாப்பா…..
சின்னஞ் சிறிய எலியின் பாட்டு பாடி வா பாப்பா…..
எலி வருகுது எலி வருகுது ஓடி வா பாப்பா…..
வலையை விட்டு வெளியில் வருகுது ஓடி வா பாப்பா…
ஆக்கம் சு. சுகுமார் (18.10.2021)
சுகுமார் தபெ சுப்பிரமணியம் SHUGUMAR - சுகுமார் தபெ சுப்பிரமணியம் SHUGUMAR அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Oct-2021 6:16 pm
தீபத் திருநாள்……தீபாவளி - 2021
தீபத் திரு நாள் வந்தது
தீயில் ஒளியும் பிறந்தது
தீமைகள் யாவும் அழிந்தன
தீர்வுகள் பலவும் தந்தன
இன்பம் பொங்கும் திருநாளாம்
உள்ளம் நெகிழ்ந்த ஒருநாளாம்
இறைவன் வென்ற பெருநாளாம்
ஊரே மகிழ்ந்த நன்னாளாம்
அரக்கன் அழிந்த இந்நாளே
உறக்கம் கலைந்த பொன்னாளாம்
அகிலம் செழித்த நன்னாளே
உறவுகள் கூடும் நம்நாளாம்
வீடுகள் தோறும் வெடிமுழக்கம்
பட்டுச் சேலைகள் மினுமினுக்கும்
விட்டுப் பிரியா நம்பழக்கம்
தட்டுகள் நிறையப் பலகாரம்
அன்பும் அறனும் நம்குணமே
எண்ணைக் குளியல் நலம்செழிக்க
அனைவரும் போற்றும் பண்டிகையாம்
கண்ணன் அருள்வான் தன்னருளே
தீபங்கள் ஏற்றி மகிழ்ந்திடுவோம்
இல்லங்கள் தோறும் போற்றிடுவோம்
தீப ஒளிகள் நிறைத்திடவோம்
நலங்கள் வேண்டிப் பாடிடுவோம்
வெற்றி எங்கள் கண்ணனுக்கே
வேண்டி நாமும் வணங்கிடுவோம்
போற்றி என்றும் புகழ்ந்திடுவோம்
வேண்டிய எங்கள் தீப..…ஆவளியே…
ஆக்கம்: கவிஞர் திரு.சு.சுகுமார்(016-6495189)
Email : maaren19@gmail.com
காதல் நினைவே
கையில் கோலும்
மையில் வார்த்தையும்
தையல் போடும்
கவிதைச் சொல்லும்
கண்கள் மோதும்
விழிகள் சிவக்கும்
காதல் பேசும்
கனவில் மிதக்கும்
கடக்கும் காலம்
நிமிடம் ஆகும்
நீங்கிப் பிரிந்தால்
வருசம் போலும்
துடிக்கும் உள்ளம்
தீயில் புழுவாய்
துணையைத் தேடும்
தனிமை வெள்ளும்
விண்மீன் கூட்டம்
விடியும் வரைக்கும்
விடிவே இல்லை
வாழும் வரைக்கும்
கதிரவன் ஒளியோ
பூமி வரைக்கும்
இவர்கள் அன்போ
எல்லை இல்லை…..
விட்டில் பூச்சி
விளக்கில் எரியும்
விட்டுப் பிரிந்தால்
விண்ணில் மறையும்…..
ஆக்கம்: கவிஞர் திரு.சு.சுகுமார்(016-6495189)
email :maaren19@gmail.com
மேலும்...
கருத்துகள்