Sudha Janaki - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Sudha Janaki |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 154 |
புள்ளி | : 2 |
பூந்தென்றல் குழலினில் ஏற்றி, இசையாய் வடித்தாள் தங்கை...
வெண் மலர் இழையில் ஏற்றி மாலையாய் தறித்தாள் தங்கை...
வின் மலர் வானில் ஏற்றி தூது விடுத்தாள் தங்கை...
விடிந்ததும் கதிரவன் வருவான் மெல்ல, கவிதை, உனை இவன் காண மெல்ல...
இரவில் இந்திரன் வருவான் மெல்ல, என் கவிதை உன் மனதில் சொல்ல...
பால் மனம் மாறா மனமே, உன் மனம் இன்றி குடிபுக வேறெங்கு போவேன்..
பிரிந்தாள் மறைந்து போவேன், காற்றில் கரைந்து, உன் மூச்சில் வாழ்வேன்...
விதைகள் மரங்கள் ஆனது, விழுதுகள் எங்கும் பறவுது...
இனி அழுதிட வழி இல்லை..
உன் அன்பின் விதையை அழித்திட வழி இல்லை... என்றும்...
முருங்கை இலையோடு முத்து முத்தாய் தூரல்கள்..
வெள்ளை நிற பூவோடு தொட்டு பேசும் சாரல்கள்..
காற்றின் இசையோடு தலை ஆட்டி அசையும் மர கிலைகள்..
வானம் இருளகண்டு மின் ஒளி ஏற்றும் மின்னல்கள்..
சாலையினில் புது நதிகள்..
மாலையினில் மௌனங்கள்..
தொட்டு பேசும் மாலை சாரல்கள்.,
தட்டி எழும்பும், மனதோடு தூரல்கள்..
நெஞ்சோடு பேசும் நினைவலைகள்.,
கொஞ்சம் சிரிக்கும் என் இதழ்கள்..
மாலை தென்றல், துணையாக மழை கொண்டு வர..
நெஞ்சம் நனைந்து நின்றேன்..
தங்கை இவள் முகம் காண ஏங்கி நின்றேன்..
- சுதா ஜானகி.