Vishnu - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Vishnu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Jul-2022 |
பார்த்தவர்கள் | : 106 |
புள்ளி | : 2 |
மரகத மயிலே ஆராரோ
மாணிக்க சிலயே ஆராரோ
மயக்கும் எழிலே ஆராரோ
சிறிய விழிகள் சோர்ந்து கிடக்குது
சீக்கிரம் துயில்வாய் ஆராரோ
தரணி ஆள்வாய் ஆராரோ
தங்க நிலவே ஆராரோ
தழைக்கும் தமிழே ஆராரோ
சீனி வழியும் செந்தூர இதழ்கள்
சோர்ந்தது போதும் ஆராரோ
இனிக்கும் கரும்பே ஆராரோ
இன்ப வரமே ஆராரோ
இமயம் தொடுவாய் ஆராரோ
இனிய அழுகை இசைத்து போதும்
இயல்பாய் துயில்வாய் ஆராரோ
- விஷ்ணு
புயல் அடித்தால் கதரிவிடும்
புதுமலரின் ஓசையை போல்
குலமகள் அவள் படும்துயரை
கேட்டு காற்று தூது வரும்
செங்கதிர் வான் கரம் பிடித்து
சிலையென அவர் நிலைமறந்த
இணைப்பிரியா நாளையெல்லாம்
நினைத்து காற்று மிதந்து வரும்
மான்விழியாள் மங்கை அவள் - ஏன்
மனதில் புயல் சூடி நின்றாள்?
விரைந்து சென்ற அம்பினை போல்
வில்லை ஏன் விலகி நின்றாள்?
காரிகையாள், கண்ணீர் கொண்ட
தூரிகையால் ஏன் உனை துடைத்தாள்?
கேட்கும் காற்றின் கேள்விக்கெல்லாம்
கோமகனிடத்தில் மொழியில்லையே
நிலமகளின் நிலை குறித்து
சொல்ல துணிந்தது காற்று - அவள்
நிலை உணர்ந்து உடைந்து விட
தலைவன் மனம் முழுதாயில்லையே
- விஷ்ணு