நசைஇயார் நல்கார் எனினும் - தனிப்படர்மிகுதி

குறள் - 1199
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.

Translation :


Though he my heart desires no grace accords to me,
Yet every accent of his voice is melody.


Explanation :


Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears.

எழுத்து வாக்கியம் :

யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் ‌கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.

நடை வாக்கியம் :

நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

பொருட்பால்
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.

காமத்துப்பால்
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே