வினையான் வினையாக்கிக் கோடல் - வினைசெயல்வகை

குறள் - 678
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

Translation :


By one thing done you reach a second work's accomplishment;
So furious elephant to snare its fellow brute is sent.


Explanation :


To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another.

எழுத்து வாக்கியம் :

ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.

நடை வாக்கியம் :

ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

பொருட்பால்
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.

காமத்துப்பால்
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
மேலே