வினையான் வினையாக்கிக் கோடல் - வினைசெயல்வகை
குறள் - 678
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
யானையால் யானையாத் தற்று.
Translation :
By one thing done you reach a second work's accomplishment;
So furious elephant to snare its fellow brute is sent.
Explanation :
To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another.
எழுத்து வாக்கியம் :
ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.
நடை வாக்கியம் :
ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.