முடிவும் இடையூறும் முற்றியாங் - வினைசெயல்வகை

குறள் - 676
முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.

Translation :


Accomplishment, the hindrances, large profits won
By effort: these compare,- then let the work be done.


Explanation :


An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion).

எழுத்து வாக்கியம் :

செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

நடை வாக்கியம் :

ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை, முடியும்போது அடையும் பெரும்பயன் ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்க.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

பொருட்பால்
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்.

காமத்துப்பால்
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.
மேலே