எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த வார ஆனந்தவிகடனில் வெளியாகியுள்ள எனது "உள்ளுறையும் ஈரம்"...

இந்த வார ஆனந்தவிகடனில் வெளியாகியுள்ள எனது "உள்ளுறையும் ஈரம்" என்ற கவிதையை எழுத்துத் தள தோழர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.


உள்ளுறையும் ஈரம்



ஊருக்கு வரும்போதெல்லாம்



அம்மாவிடம் நான்



வழக்கமாகக் கேட்கும் கேள்வி



மழையேதும் பெய்துச்சா?



அம்மா கூடுதலாக



இன்னொரு பதிலும் சொல்வாள்



விடுப்பில் வந்தபோது நீயும்



வீட்டுக்கு வந்து போனாய்



வழக்கம்போல் என் நலத்தை



விசாரித்துச் சென்றாய் என்று.



 



நான் இல்லாதபோதும்



என் மண்ணில் மழை பொழிவதும்



என் மனையில் நீ புகுவதும்



எனக்கு மகிழ்ச்சியே.



 



பிடிவாதம் என்ற செல்லாக்காசின்



இரு பக்கங்களாய்



நீயும் நானும்!



-சேயோன் யாழ்வேந்தன்

நாள் : 18-Sep-15, 12:59 pm

மேலே