எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்மை..................! "பெண்கள் நாட்டின் கண்கள்"! "மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல...

பெண்மை..................!

"பெண்கள் நாட்டின் கண்கள்"! "மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா" என்றார் பாரதி . பெண் என்பவள் உலகில் கடைசியாகப் படைக்கப் பட்ட ஒரு பாவப் பட்ட உயிர்! அவள் அன்பு என்னும் மண்ணெடுத்து பாசம் என்னும் நீரூற்றி மலர்களின் இதழ்களின் நிறமெடுத்து அழகான பொருட்களின் வடிவெடுத்து தாய்மையின் உருவாகப் பிறந்தவள்!

ஒரு வீட்டின் கடைசிப் பிள்ளை எல்லோருக்கும் செல்லப் பிள்ளை அதுபோல கடைசியாகப் படைக்கப் பட்ட பெண்ணும் செல்லக் குழந்தை தானே!பெண் மிகவும் மேன்மையானவளும் மென்மையானவளும் கூட! இவ்வுலகில் இயற்கைகள் அனைத்தும் பெண்ணின் பெயராலேயே அழைக்கப் படுகின்றன!

பெண் அன்பானவள், அழகானவள், அறிவானவள். தைரியமானவள், தன்னம்பிக்கை மிக்கவள், அமைதியானவள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்! ஒரு பெண் நினைத்தால் அரக்கனையும் அமரன் ஆக்கக் கூடிய சக்தி அவளிடம் உண்டு! இவ்வுலகில் அனைத்தும் பெண்மைக்குள் சங்கமம்! ஆக்கலும் அழித்தலும் ஒரு பெண்ணை சார்ந்ததே!

பலர் பெண் என்றாலே போதைப் பொருளாகவும் இழிவான படைப்பாகவும் அற்பப் புழு போலவும் பரிதாபத்துக்குரிய பொருளாகவுமே பார்க்கின்றனர்! ஆனால் பெண்மைக்குள்ளிருக்கும் சக்தியை யாரும் பார்ப்பதில்லை! பெண் சிறு துன்பம் வந்தாலும் அழக் கூடியவள் என்பது தான் பொதுவான கருத்து! ஆனால் பெண்கள் ஒரு துன்பம் வரும் பொது தங்களால் முடிந்த வரை அதை சமாளிக்கப் பார்ப்பார்கள் எப்பொழுது அவர்களால் அதை சமாளிக்க முடியாது என்ற நிலை வருகிறதோ அப்பொழுதான் அவள் கண்களில் கண்ணீரைக் காண முடியும்!

எதற்கும் அஞ்சாதவள் கண்ணீர் விடுகிறாள் என்றால் அக்கண்ணீர் எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க தவறக் கூடாது! ஒரு பெண்ணின் வாயிலிருந்து வரும் ஒரு வார்த்தை கூட பலிக்காமல் போகாது! அவள் ஆசீர் வாதித்தாலும் சரி சாபமிட்டாலும் சரி நிச்சயமாய் பலிக்கும் அவ்வளவு சக்தி பெண்மைக்கு உண்டு!

பெண் குடும்பம் என்ற வட்டத்துக்குள் வாழ்வதாலேயே பல கட்டமைப்புகள் இன்னும் பண்பாடு மாறாமல் பாது காக்கப் படுகின்றன! பெண்களால் அனைத்து துறைகளிலும் ஆண்களை விட அதிகமாக சாதிக்க முடியுமென தற்போதைய பெண்கள் நிரூபித்து வருகின்றனர்! ஆயினும் பல பெண்கள் அடிமை வாழ்வின் அநியாயங்களில் சிக்கி சீரழியாமல் இல்லை! ஒரு ஆணுக்கு இவ்வளவு சக்தி என்றால் அந்த ஆணையே தன் வயிற்றில் சுமந்த பெண்மைக்கு எவ்வளவு சக்தி இருக்கும் என்பது தான் எனது சிந்தனை!

இறைவனை சுமந்தவளும் கூட பெண் தானே! ஆனால் தற்போதைய கால கட்டத்தில் பெண்மைக்கு இழைக்கப் படும் துரோகங்களை பார்க்கும் போது நெஞ்சு நிலை கொள்ளவில்லை! அனைத்தும் பெண்மையின் வடிவமாக இருக்கும் போது பெண்மைக்கு தீங்கிழைக்க நினைப்பது பாவமே! பெண்மையைப் போதைப் பொருளாகவோ பரிதாபத்துக்குரிய பொருளாகவோ பார்க்காமல் இவ்வுலகில் அனைத்தும் பெண்மைக்குள் சங்கமம் என்று பாருங்களேன்! இவ்வுலகம் புதிய படைப்பாக மாறும்!

அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்! என் வாழ்த்து பெண்களுக்கு மட்டுமல்ல பெண்மையைப் போற்றிப் பாதுகாக்கும் ஆண்களுக்கும் சேர்த்து தான்! வாழ்த்து உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டுப் பெண்களுக்கும், என் வாழ்த்தை சொல்லுங்கள்! பெண்மையைப் போற்றுங்கள்!வாழ்க வளமுடன்!
.........................சஹானா தாஸ்!

பதிவு : சஹானா தாஸ்
நாள் : 8-Mar-14, 7:53 am

மேலே