ஒரு காதல் கவிதை
ஒரு காதல் கவிதை எழுத வேண்டும்
அவன் நண்பர்களிடம் கேட்டான்
ஒருவன் சொன்னான் :
ஒரு பெண்ணை முதலில் காதலி பின் எழுது
உன் கவிதை நினைத்தபடி நினைக்கும் போதெல்லாம் வரும்.
இன்னொருவன் சொன்னான் :
கவிதைதான் காதலுக்கு ஆரம்பமே
முதலில் கவிதை எழுது கவிதையும் காதலும் தொடரும்
முதலில் சொன்னவன் : அதெப்படி ......?
நிறுத்து அண்ணே .....இவர்கள் சொல்லட்டும்
உங்கள் பதில் ?
-----கவின் சாரலன்
0