சிலர் ரசிப்பார் சிலர் பறிப்பார்

சிலர் மலர் ரசிப்பார்
சிலர் மலர் பறிப்பார்
சிலர் மலர் பிழிந்து அத்தர் ஆக்குவார்...
மலர் ரசித்தவன்
கவிஞன், கவிதையாக்கினேன் என்றான் !
மலர் பறித்தவள்
மங்கை ,கூந்தலில் சூடி அழகு செய்தேன் என்றாள் !
மலர் பிழிந்தவன்
அத்தர் வியாபாரி, மலருக்கு மறுபிறவி தந்தேன் என்றான் .
இதில் யார் உயர்ந்தவர் நீங்கள் சொல்லுங்கள் ?
-----கவின் சாரலன்