பழய நினைப்பு

நேற்றவன் சேவகனாம் -- இன்று
நீங்கிவந் திட்டாண்டி!
ஏற்றம் இறைத்திடவே -- உச்சி
ஏறி மிதித்தாண்டி!

சேற்று நிலத்தினிலே -- ஒரு
சின்னஞ்சிறு குறும்பன்

தோற்றி மணியடித்தான் -- அந்தத்
தொல்லை மணி ஓசை.

பழைய சேவகனின் -- காதிற்
பட்டதும் வண்டி என்றே

பழய ஞாபகத்தில் -- செல்லும்
பாதை குறிப்பதற்கு

முழுதும் கைதூக்க -- அவன்
முக்கரணம் போட்டு

விழுந்து விட்டாண்டி! -- அவன்
வீணில் கிணற்றினிலே!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 6:32 pm)
பார்வை : 35


பிரபல கவிஞர்கள்

மேலே