இடையினம்

(Idayinam)

இடையினம்

இடையினம் = இடை + இனம்

மெய்யெழுத்துக்களின் மூன்று வகுப்புக்களுள் இறுதியாக வருவது இடையினம் ஆகும்.

மெய் எழுத்துகளில் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிக்கும் எழுத்துகளை இடையின எழுத்துக்கள் அல்லது இடையெழுத்துக்கள் என்றும் கூறுவர்.


ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறு மெய் எழுத்துகளும் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிப்பதால் இடையின எழுத்துகள் ஆகும்.

இடையினத்திற்கு வேறு பெயர்களும் உண்டு. அவை இடை, இடைமை, இடைக்கணம்.

இவை வல்லினம் பிறக்கும் இடமான மார்புக்கும் மெல்லினம் பிறக்கும் இடமான மூக்கிற்கும் இடைப்பட்ட இடமான கழுத்தில் இருந்து பிறப்பதால் இடையெழுத்து எனப் பெயர் பெற்றது. இடையின எழுத்துக்களுக்கு இன எழுத்துக்கள் இல்லை.


மேலே