வன் தொடர்க் குற்றியலுகரம்

(Van Thodark Kuttriyalukaram)

வன் தொடர்க் குற்றியலுகரம்

வல்லின எழுத்துக்களைத் தொடர்ந்து உகரம் வந்தால், அது வன் தொடர்க் குற்றியலுகரம் (வல்லினத்தைத் தொடர்ந்த குற்றியலுகரம்) ஆகும்.

சுக்கு, அச்சு, பட்டு, கழுத்து, உப்பு ஆகியவற்றில் வல்லின எழுத்தைத் தொடர்ந்து உகரம் வருவதால் குற்றியலுகரம் உண்டானது.

உதாரணம்

பட்டு + ஆடை = பட்டாடை
நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து 'ட்' என்ற வல்லின எழுத்தைத் தொடர்ந்து 'டு' என்ற உகரம் வந்ததாலும், அது 'ஆடை' என்ற வரும் மொழியுடன் சேர்ந்து தனது 'ட் + உ = டு' விலுள்ள உகரத்தைத் திரிந்து 'ட் + ஆ = டா' என்று ஆனதாலும் வன் தொடர்க் குற்றியலுகரமானது.



மேலே