பாரத தேவியின் அடிமை

(நந்தன் சரித்திரத்திலுள்ள “ஆண்டைக் கடிமைக்
காரனல்லவே” என்ற பாட்டின் வர்ண மெட்டையும்
கருத்தையும் பின்பற்றி எழுதப்பட்டது.)

பல்லவி

அன்னியர் தமக்கடிமை யல்லவே -- நான்
அன்னியர் தமக்கடிமை யல்லவே.

சரணங்கள்

மன்னிய புகழ்ப் பாரத தேவி
தன்னிரு தாளிணைக் கடிமைக் காரன். (அன்) 1

இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம்
திலக முனிக்கொத்த அடிமைக் காரன். (அன்) 2

வெய்ய சிறைக்குள்ளே புன்னகையோடு போம்
ஐயன் பூபேந்தரனுக் கடிமைக் காரன். (அன்) 3

பு{[குறிப்பு]: பழைய கட்சியார் புதுக் கட்சியாரைப் பற்றி
சர்க்காரிடம் கோள் மூட்டியும் பயனில்லை என்றாய் விட்டது.}

காலர் முன்னிற்பினும் மெய்தவறா எங்கள்
பாலர் தமக்கொத்த அடிமைக் காரன். (அன்) 4

காந்தன லிட்டாலும் தர்மம் விடாப்ரம்ம
பாந்தவன் தாளிணைக் கடிமைக் காரன்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 4:52 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே