வ.உ.சி.க்கு வாழ்த்து

வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார் மன்னனென மீண்டான்’ என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய்நீ வருந்தலைஎன் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம் நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி,
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 5:15 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே