சாவுக்கும் வாழ்வுக்கும்

சாவுக்கும் வாழ்வுக்கும்
சாண்தூரம் இருந்தாலும்
தேவதை உன் புன்னகையைச்
சித்திரமாய்த் தீட்டேனோ?
தலையெல்லாம் பூப்பூத்துத்
தள்ளாடும் மரம் ஏறி
இலையெல்லாம் உன் பெயரை
எழுதிவைக்க மாட்டேனோ?
சிலுசிலுக்கும் இரவில் நீ
சிற்றுறக்கம் கொண்டாலும்
கொலுசுக்குள் மணியாகிக்
கூப்பிடவே மாட்டேனோ?


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:18 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே