கண்ணாலே ஒரு காதல் கவிதை சொன்னாலே

கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதைத் தந்தாளே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

கடற்கரைதனில் நீயும் நானும் உலவும்பொழுது
பறவையைப் போல் கானம் பாடி பறக்கும் மனது
இங்கு பாய்வது புதுவெள்ளமே
இணை சேர்ந்தது இரு உள்ளமே
குளிர்வாடை தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன் துணையிலே
இளம்மேனி உன் வசமோ

உனக்கென மணிவாசல் போலே மனதைத் திறந்தேன்
மனதிற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்
வளையோசைகள் உன் வரவைக் கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று
நெடுங்காலங்கள் நம் உறவைக் கண்டு
நமை வாழ்த்திட நல் இதயம் உண்டு
இன்ப ஊர்வலம் இதுவோ...


கவிஞர் : கவிஞர் வாலி(6-Dec-12, 1:37 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே