தமிழியக்கம் - மாணவர்

தமிழ்நாட்டின் கண்ணொப்பீர்
கனியி ருக்க

நிற்கின்ற நெடுமரத்தில்
காய்வர நினையாதீர்
மூதுணர்வால்

முற்கண்ட எவற்றினுக்கும்
முதலான நந்தமிழை
இகழ்த லின்றிக்

கற்கண்டாய் நினைத்தின்பம்
கைக்கொண்டு வாழ்ந்திடுவீர்
நன்றே என்றும்

ஆங்கிலத்தைக் கற்கையிலும்
அயல்மொழியைக் கற்கையிலும்
எந்த நாளும்

தீங்கனியைச் செந்தமிழைத்
தென்னாட்டின் பொன்னேட்டை
உயிராய்க் கொள்வீர்

ஏங்கவைக்கும் வடமொழியை,
இந்தியினை எதிர்த்திடுவீர்
அஞ்ச வேண்டாம்.

தீங்குடைய பார்ப்பனரின்
ஆயுதங்கள் "இந்தி" "வட
சொல்" இரண்டும்

பார்ப்பான் பால் படியாதீர்;
சொற்குக்கீழ்ப் படியாதீர்
உம்மை ஏய்க்கப்

பார்ப்பான்; தீ துறப்பார்ப்பான்
கெடுத்துவிடப் பார்ப்பான் எப்
போதும் பார்ப்பான்

ஆர்ப்பான் நம் நன்மையிலே
ஆர்வமிக உள்ளவன் போல்!
நம்பவேண்டாம்.

பார்பானின் கையை எதிர்
பார்ப்பானையே பார்ப்பான்
தின்னப் பார்ப்பான்

தமிழின்பேர் சொல்லி மிகு
தமிழரிடைத் தமிழ் நாட்டில்
வாழ்ந்திட் டாலும்

தமிழழித்துத் தமிழர் தம்மை
தலை தூக்கா தழித்துவிட
நினைப்பான் பார்ப்பான்

அமுதாகப் பேசிடுவான்
அத்தனையும் நஞ்சென்க
நம்ப வேண்டாம்

தமிழர்கடன் பார்ப்பானைத்
தரைமட்டம் ஆக்குவதே
என்று ணர்வீர்.

தமிழரின்சிர் தனைக்குறைத்துத்
தனியொருசொல் சொன்னாலும்
பார்ப்பான் தன்னை

உமிழ்ந்திடுக மானத்தை
ஒரு சிறிதும் இழக்காதீர்
தமிழைக் காக்க

இமையளவும் சோம்பின்றி
எவனுக்கும் அஞ்சாது
தொண்டு செய்வீர்

சுமை உங்கள் தலைமீதில்
துயர்போக்கல் உங்கள் கடன்!
தூய்தின் வாழ்க!


கவிஞர் : பாரதிதாசன்(19-Mar-11, 6:47 pm)
பார்வை : 173


பிரபல கவிஞர்கள்

மேலே