இறந்தவன் மேற் பழி

அந்திய காலம் வந்ததடியே! - பைந்தொடியே!
- இளம்பிடியே! பூங்கொடியே!
சிந்தை ஒன்றாகி நாம் இன்பத்தின் எல்லை
தேடிச் சுகிக்கையில் எனக்கிந்தத் தொல்லை
வந்ததே இனி நான் வாழ்வதற் கில்லை
மனத்தில் எனக்கிருப்ப தொன்றே - அதை -இன்றே -
குணக்குன்றே! - கேள்நன்றே! (அந்நிய)
கடும்பிணி யாளன்நான் இறந்தபின், மாதே!
கைம்பெண்ணாய் வருந்தாதே, பழிஎன்றன் மீதே.
அடஞ் செய்யும் வைதிகம் பொருள் படுத் தாதே!

ஆசைக் குரியவனை நாடு -மகிழ்வோடு - தார்சூடு
நலம்தேடு! (அந்நிய)
கற்கண்டு போன்றபெண் கணவனை இழந் தால்
கசந்த பெண் ஆவது விந்தைதான் புவி மேல்!
சொற் கண்டு மலைக்காதே உன் பகுத் தறிவால்
தோஷம், குணம் அறிந்து நடப்பாய் - துயர் கடப்பாய் -
துணை பிடிப்பாய் - பயம் விடுப்பாய். (அந்நிய)


கவிஞர் : பாரதிதாசன்(3-Jan-13, 4:53 pm)
பார்வை : 0


மேலே