தமிழ் கவிஞர்கள்
>>
பாரதிதாசன்
>>
கைம்பெண் நிலை
கைம்பெண் நிலை
கண்போற் காத்தேனே - என்னருமைப்-
பெண்ணை நான்தானே (கண்)
மண்ணாய்ப் போன மாப் பிள்ளை
வந்ததால் நொந்தாள் கிள்ளை
மணமக னானவன் – பிணமக னாயினன்
குணவதி வாழ்க்கை எவ் - வணமினி ஆவது? (கண்)
செம்பொற் சிலை, இக் காலே
கைம் பெண்ணாய்ப் போன தாலே
திலகமோ குழலில் - மலர்களோ அணியின்
உலகமே வசைகள் - பலவுமே புகலும் (கண்)
பொன்னுடை பூஷ ணங்கள்
போக்கினாளே என் திங்கள்!
புகினும் ஓர் அகம் சகுனம் தீ தென
முகமும் கூசுவார் - மகளை ஏசுவார்! (கண்)
தரையிற் படுத்தல் வேண்டும்
சாதம் குறைத்தல் வேண்டும்
தாலி யுற்றவள் - மே லழுத்திடும்
வேலின் அக்ரமம் - ஞாலம் ஒப்புமோ? (கண்)
வருந்தாமற் கைம்பெண் முகம்
திருந்துமோ இச் சமுகம்
மறுமணம் புரிவது – சிறுமைஎன் றறைவது
குறுகிய மதியென - அறிஞர்கள் மொழிகுவர் (கண்)
பிரபல கவிஞர்கள்
![Thabu Shankar](https://eluthu.com/poem-small-thumb/131.jpg)
தபு ஷங்கர்
Thabu Shankar
![Gnanakoothan](https://eluthu.com/poem-small-thumb/129.jpg)
ஞானக்கூத்தன்
Gnanakoothan
![V. I. S. Jayapalan](https://eluthu.com/poem-small-thumb/128.jpg)
வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan
![Kanimozhi](https://eluthu.com/poem-small-thumb/127.jpg)
கனிமொழி
Kanimozhi
![Leena Manimegalai](https://eluthu.com/poem-small-thumb/126.jpg)