தமிழ் கவிஞர்கள்
>>
ஞானக்கூத்தன்
>>
உறவு
உறவு
ஈரக் கைகளைப் புடவையில் துடைத்தவா
றெதிர் வீட்டம்மாள் எட்டிப் பார்த்தாள்
அம்மா தபால்.
அஞ்சலட்டையை நொடியில் படித்ததும்
எரவாணத்தில் செருகிப் போனாள்
எரவாணத்தில் செருகிய கடிதம்
வருத்தப்பட்டு மூக்குக் கறுத்ததே.
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
