கணக்குப் போட்டான்

கணக்குப் போட்டான் விடை பிறர்க்குத்
தெரியாதிருக்க அவன் மறைத்தான்

ஒருத்தன் பார்த்தால் அவனுக்குக்
கண்ணிரண்டும் முஷ்டிகளாகும்

பலகைகள் எல்லாம் கீழ்வைத்தார்

இடைவேளைக்கும் உணவுக்கும்
பள்ளிக்கூட மணி அசைய
பலகை அடுக்கப் படுகிறது
ஒன்றின் மேல் ஒன்றாக
சரியும் தப்பும் சரியாக

அவனைப் பார்த்தான் அவன் சரியாய்ச்
செய்தான் என்றே கருதியதால்
இவனைப் பார்த்தான் இவன் சரியாய்ச்
செய்தான் என்றே கருதியதால்
ஆமாம் என்று நினைத்தேன்
உனதென்றாலும் எனதென்
றாலும் என்ன நம்விடைகள்
இன்னொன்றுக்கு பொருந்தணுமே.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 2:23 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே