அந்தத் தெரு

சூத்திரர் தெருக்களென்று
சொல்லுவார்
ஏற்றாற்போல
மாட்டுத் தோல் உலரும்
ஆடு
கோழிகள் நாய்கள் வாழும்

முருங்கைகள்
பிள்ளை வாதக்
கிளைகளைத் தாழ்த்திக் கொண்டு
குடிசையின் வாசற்பக்கம்

‘பசுபதி
ஆறாம் பாரம்’
என்கிற சாக்குக் கட்டி
எழுத்துக்கள் தெரியும் குச்சு
இடச்சாரி
பெரியகுச்சு

மல்லிகை முல்லை
சாணி முட்டைகள்
முருங்கைக் காய்கள்
விற்கிற பழக்கமுள்ள
வீடுகள் ஆங்காங்குண்டு

தனிப்பட வர மாட்டாமல்
கடவுளின் துணையில்
அங்கே
வருகிறான் பார்ப்பான்
சாமி
வலம் வர வேதம்பாடி.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:20 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே