மண்டையைத் திறந்தால்

மண்டையைத் திறந்தால்
மூளைக் களிமண்ணாய்க்
காணும் என்று யாரோ சொன்னார்.
கண்ணால் பார்த்தால் தவிர
நான் எதையும் நம்புவதில்லை.
என் தலையைத் திறந்து
பார்த்தேன்
திறந்த இஸ்திரிப் பெட்டியில் போல் மின்
சாரம் பாய்ந்திருக்கக் கண்டேன்.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:27 pm)
பார்வை : 0


மேலே