இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ ..ஓ...ஓ..ஓ
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

வண்ண மலர்களiல் அரும்பாவாள் உன் மனதுக்கு கரும்பாவாள்
இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு மொழி கூறாயோ..ஓ..ஓ...
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள்
நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள்
அவள்விடிந்த பின் துயில்கின்றாள் என் வேதனை கூறாயோ ...ஓ...ஓ..

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா..ஆ...ஆ
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

தன் கண்ணனைத் தேடுகிறாள் மனக் காதலைக் கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என்று அதனையும் கூறாயோ...ஓ...ஓ..
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா..ஆ...ஆ
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்


கவிஞர் : கண்ணதாசன்(3-Dec-11, 3:54 pm)
பார்வை : 144


மேலே