தூக்கணாங்குருவி கூடு

தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு
என்ன நினைப்போ மனசிலே

பாக்கிறான் பூமுகத்தைப்
பைய பைய கண்ணிலே
பரிசம் போட்ட மச்சானுக்கு
என்ன நினைப்போ தெரியல

அம்மான் வீட்டு பெண்ணானாலும்
சும்மா சும்மா கிடைக்குமா
அரிசி பருப்பு சீரு செனத்தி
அள்ளி கொடுக்க வேண்டாமா….
அம்மான் வீட்டு பெண்ணானாலும்
சும்மா சும்மா கிடைக்குமா
அரிசி பருப்பு சீரு செனத்தி
அள்ளி கொடுக்க வேண்டாமா
கம்மான் கயில் பொன்னை வாங்கிக்
கட்டிக் கொள்ள வேண்டாமா
கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு
காத்துக்கிடக்க வேண்டாமா

கூரைக் குடிசை நடுவிலே
அந்தப் படுக்கையைப் போட்டு
ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சி
கோலத்தைப்போட்டு
ஆற அமர மச்சானோடு படிக்கணும் பாட்டு
ஆனாப்பட்ட ராஜா கூட மயங்கணும் கேட்டு…
அத விட்டு…


கவிஞர் : கண்ணதாசன்(3-Dec-11, 3:53 pm)
பார்வை : 147


மேலே