தமிழ் கவிஞர்கள்
>>
பாரதிதாசன்
>>
பழய நினைப்பு
பழய நினைப்பு
நேற்றவன் சேவகனாம் -- இன்று
நீங்கிவந் திட்டாண்டி!
ஏற்றம் இறைத்திடவே -- உச்சி
ஏறி மிதித்தாண்டி!
சேற்று நிலத்தினிலே -- ஒரு
சின்னஞ்சிறு குறும்பன்
தோற்றி மணியடித்தான் -- அந்தத்
தொல்லை மணி ஓசை.
பழைய சேவகனின் -- காதிற்
பட்டதும் வண்டி என்றே
பழய ஞாபகத்தில் -- செல்லும்
பாதை குறிப்பதற்கு
முழுதும் கைதூக்க -- அவன்
முக்கரணம் போட்டு
விழுந்து விட்டாண்டி! -- அவன்
வீணில் கிணற்றினிலே!
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
