ஆழ்மனதில் ஆதிகால அனுபவங்கள்

அகலாமல் அமர்ந்திருக்கும்

அட்டையைப் போல் அண்டிப்பிடித்து

அடிக்கடி அசைப்போடவைக்கும்

ஆஹாவென சிலதும் அடிமட்டமென

பலதும் அடையாளகுறிகளாகும்

அடுத்தமுறை அதேபோல் அனுபவங்களை

அணுகும் பொழுது ஆட்டுவிக்கும்

ஆழம்தெரியாமல் இறங்காதே என்றும்

அகலக்கால் வைக்காதே என்றும்

அழைக்காமல் வந்து அறிவுரை கூறும்

ஆதலால் அவரவர் அந்தகாலத்திலிருந்து

அகன்று அடுத்தகாலத்திற்ககு ஆயத்தமாகி

அன்றாட வாழ்கையில் ஆயிரமாயிரம்

அழகிய அற்புதங்களை அனுபவிக்கலாம் .

எழுதியவர் : karmugil (25-Feb-14, 12:14 am)
சேர்த்தது : karmugil
பார்வை : 184

மேலே