அவளுடன் இருந்த கடைசி நிமிடம்

கிட்டத்தட்ட 327 KM தொலை தூர பயணம் செய்தேன் அவளுக்காக. இதுவரை, நான் செய்ததை தவறான கண்ணோட்டத்தில் பார்த்த அவளை சமாதானம் செய்ய பலி ஏற்று, மன்னிப்பு கேட்க சென்றேன். என் தோல் உரசி, கை பிடித்து கோவிலுக்குள் இதுவரை நடந்த அவள், அன்று என்னை கோவிலுக்கு வெளியே நிற்க சொன்னாள் . என் சுமைகளை ஏற்க மறுத்தாள் .
கண்களில் காதல் ஒரு துளியும் இல்லை.அவள் கைபேசி தொட்ட என் கையை , சட்டென்று தட்டி விட்டாள் .பல மாதங்களுக்கு முன் என் பிறந்த நாளன்று வாங்கி வைத்திருந்த பரிசை அன்று, என் கையில் கட்டினாள். ஏதோ வாங்கிய கடனை திருப்பி கொடுத்து கடனை அடைத்தது போன்று ஒரு உணர்வு அவளுக்குள். என்னை பற்றி பேசிய உதடுகள், 3 மணி நேரம், வேறு யார் யாரையோ பற்றி என்னிடம் பேசின. ஒரு 5 நிமிடம் என்னுடன் வெளியே வர மறுத்தாள் . வேறு ஒருவருடன் பேசுவது போல் பேசினாள். நான் பரிமாறிய உணவை உண்ண மறுத்தாள். எனக்கு ஊட்டி விட வந்த கைகள் இன்று , நான் பரிமாறிய உணவை தடுத்தது. என்னை பற்றி பிடிக்காததை மட்டுமே பேசினாள். வெளியே சென்ற அவளை தடுத்து நிறுத்தினேன். அரை மணி நேரம் என்னுடன் பேச வேண்டினேன். வெளியே செல்லவில்லை என்று 5 நிமிடம் கழித்து சொன்னாள். அது எனக்காக இல்லை. அவளை பார்க்க வருகின்ற நபர், இப்பொது வேண்டாம் என்றதால் மட்டுமே. இறுதியில் அவள் கரம் பற்றி நடந்ததை மறந்து, மீண்டும் பழகலாம் என்று சொல்லும் பொழுது, என் குரல் வெளியில் வரவில்லை. கண்களின் விழும்பில் கண்ணீர். இது தான் அவலுடன் பேசும் கடைசி வார்த்தை என்று தோன்றியது. அவள் அருகில் சென்று நின்றேன். விலகி சென்றாள். அப்போது என்னுள் இருந்த உயிர் என் கண் முன் என்னை விட்டு விலகி செல்வதை, உணர்ந்தேன். அவள் உதடு இனி என் பேர் சொல்லி அழைக்கும் என்ற நம்பிக்கை யை இழந்தேன். இந்த பிறவியில் நான் பெற்று வந்த மொத்த சந்தோசமும் போவதை கண்டேன். 4 நாட்கள் ஒரு நாய் பின் தொடர்ந்து வந்தால்,, பரிதாப பட்டு 5ஆம் நாள் அந்த நாய்க்கு உணவு அளிக்க மனம் இறங்கும். 6 அறிவு கொண்ட மனிதன், அவளுக்கு பிடித்தவ "நாய்", இருந்த நான், 300 km அவளுக்காக சென்றும் எனக்காக அவள் மனம் இறங்கவில்லை. போய் வருகிறேன் என்று சொல்ல கூட முடியாமல் நின்றேன். வழி அனுப்ப அவள் வெளியில் வர வில்லை. ஒரு வழியாக வந்தாள் . சரி என்று சொல்லி விட்டு நான் திரும்பும் முன், அவள் வீட்டுக்குள் சென்றாள். அதன் பின், எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. குருந்தகவலும் இல்லை. அவள் வாழ்கையில் இனி நான் இல்லை என்று மட்டும் புரிந்தது. உயிருடன் இருக்கும் பொழுதே நரக வேதனை தந்து சென்றாள்.
உறவினால் உண்டான காதல்!
உயிரோடு கலந்த காதல்!
உறவு முறிய வேண்டும்!
இல்லையென்றால்,
உயிர் பிரிய வேண்டும்!
இறுதியில் இரண்டுமே நிகழ்ந்தது.
உறவை முறித்து கொண்டேன்.
அவளை நினைத்த உயிரை மாய்த்து கொண்டேன்.
கன்னம் பிடித்து விளையாடிய கைகளினால், கொள்ளி வைத்து சென்றாள்.

எழுதியவர் : சாய்நாத் (12-Feb-15, 6:06 pm)
சேர்த்தது : sainath
பார்வை : 143

சிறந்த கட்டுரைகள்

மேலே