குளித்தலை சசி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  குளித்தலை சசி
இடம்:  குளித்தலை
பிறந்த தேதி :  29-Dec-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jul-2013
பார்த்தவர்கள்:  116
புள்ளி:  7

என்னைப் பற்றி...

அரசியல்வாதி , எழுத்தாளர் , கவிஞன்

என் படைப்புகள்
குளித்தலை சசி செய்திகள்
குளித்தலை சசி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2014 1:46 am

உன்னை
மொழிகளுக்கெல்லாம்
முதல்மொழி என்றார்...
அதனால் உன்னை
முதலாகப் போட்டு
வியாபாரம் தொடங்கிவிட்டார் !
என்ற அப்துல் ரகுமானின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. வலிமை வாய்ந்த இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையினரிடையே சிறுபான்மையான தமிழர்கள் காலப்போக்கில் கரைந்து விடமால் தங்கள் அடையாளத்தை காக்க உதவுவது மொழி என்னும் கவசம் தான்.

“ மொழி என்னும் நகரத்தை நிர்மாணிக்க ஒவ்வொரு மனிதனும் ஒரு கல்லைக் கொண்டு வந்தான் “ என்ற எமர்சனின் வரிகள் நம் ஒவ்வொருவருடைய சிந்தனைக்கும் உரியது.

தமிழகத்தில் மட்டும் ஏழு கோடித் தமிழர்கள் வாழ்கின்றோம். இந்தியா முழுவதும் 50 லட்சம் தமிழர்கள் பரவி கிடக்கின்றனர்

மேலும்

குளித்தலை சசி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2014 1:40 am

என்னுள்
உணர்வுகள்
அரும்பத் தொடங்கிய
நாளிலிருந்து
உந்தன் கொலுசொலியில்
சங்கீதம்
சங்கமிக்க கண்டேன்..

மீசை
முளைப்பதற்குள்ளாகவே
உன்னை பற்றிய
ஆசை
என்னுள் விளைந்துகிடந்தது..

ஆயிரம்முறை
என்கால்கள் உன்னை
கடந்து நடந்திருக்கும்..
என்
இதயம் மட்டும்
உன்னை கடந்த
இடத்தில் கிடந்தது
துடித்திருக்கும் ..


பதின்பருவத்து
நாட்களில்
என்னுலகத்தில் நீ
மட்டும் தான் அழகி ..

என் கனவுகள்
முழுமையும் உன்னை
பற்றிய முனுவலில்
நீண்டு கிடக்கும் ..
இன்றும் அப்படித்தான் ..

என்
இதயப்பள்ளத்தாக்கில்
உன்மொழி மட்டும்தான்
அருவியாய்
கொட்டும்..

உன்னை
பற்றிய நினைவு

மேலும்

குளித்தலை சசி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2014 1:37 am

இன்னும் வாய்மூடியே
கண்களால் - உன்னோடு
எத்தனைநாட்கள் மௌனப்போர்
புரியப்போகின்றேனோ ?

என்ன தயக்கமோ
தெரியவில்லை – என்
காதலை உன்னிடம் சொல்ல ...

உன்னை சந்திக்கும்
தருணங்களிலெல்லாம்
சுவற்றுப்பல்லியும், சுற்றமும் - என்
காதலை உன்னிடம்
கொண்டுபோய் சேர்க்கும்
ரகசியத்தை ரசித்தப்படியே நான் ...

உன்னை பார்த்த
நேற்று தொடங்கியது
என் முதல் காதல் ...


நேற்று கொண்ட காதலை
இன்று கண்டதும் சொல்வதில்
உடன்பாடில்லை எனக்கு ...

பொழுதுகள்
சுகமாகவோ, சுமையாகவோ
கடந்து கொண்டிருக்க
நான் மட்டும்
உன்னை தேடியபடியே ....

தேர்வு அறைகளில்
உன்னோடு அமரும் – சில
எதிர்பாராத தருணங்களை

மேலும்

கருத்துகள்

மேலே