ஏஆர் பைசால் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஏஆர் பைசால் |
இடம் | : சபா நகர் |
பிறந்த தேதி | : 02-Aug-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 5 |
கலைமானி பட்டதாரி BA
ஏ.ஆர். பைசல்
'இறக்காமத்து வானம்பாடி'
**********************
மெத்தப் படித்தவர்
மேடைப் பிரபலம்
சுத்தப் பைத்தியம்
சூடுகாண் பூனைகள்
சித்தம் தளர்ந்தவர்
சில்லறை இழந்தவர்
வித்தை பயின்றவர்
வீதியில் துயின்றவர்
அத்தனை ரகத்தோர்க்கும்
ஆம் உண்டு தன்மானம்
எளியவர் வலியவர்
இதயமே உடையவர்
இளையவர் முதியவர்
இரவலில் வாழ்பவர்
கரியவர் வெண்மையர்
கலைஞர்கள் அடங்கலாய்
கௌரவம் என்பது
அனைவர்க்கும் ஒன்றுதான்
காசு பொருள் புகழ்
யாவுமிழப்பினும்
கௌரவம் இழந்து போய்
காலில் விழுந்திடார்
...மாறிப்போன மாரி...
நீலத் தாவணி
கட்டியிருக்குது வானம்
நீர்க்கடிதம் எழுதி
மண்ணுக்கனுப்பிடும் காலம்
மார்கழியின் மழையை இன்னும் காணோம்
மாரியினை மறந்தவராய்ப் போனோம்
குளங்களுக்குள்
கணம் வரையிது கோலம் - பனி
கூதலாலே நடு நடுங்குது தேகம்
பயிர்களுக்குப்
பகலிரவாய்த் தாகம் - இதை
பார்த்தும் ஏனோ
பொழியவில்லை மேகம்
காலநிலை
காட்டுகின்ற ஜாலம்
காணவில்லை பதினாறில் நாமும்
ஈரமில்லா
இதயங்களால் தானோ
இந்த நிலைக்காளானோம் நாமும்
வானம் பார்த்த
பூமியெல்லாம் பாவம்
வரளுதடா யாருடைய சாபம்
எம்கரங்கள்
தானிதற்குத் தூபம்
இட்டதை நாம்
ஏற்றால் மழை தூவும்
இறக்காமத்து வானப்பாடி
ஏ.ஆர். பைச
மனிதனைக் காணோம்
பூமிப் பந்து
புதுமையாய் சுழல்கிறதா
இல்லை இல்லை
இல்லவே இல்லை
மனித செயற்பாடுதான்
மாற்றி அதைச் சுழற்றுகிறது
சாதனையில் மனிதன்
சரித்திரம் படைத்துவிட்டான்
ஆனால்
சரித்திரத்தால் மனிதனை
சந்திக்க முடியவில்லை
எங்கெல்லாம் தேடி
ஏமாந்து போய் விட்டது
மனிதா
மற்றனைத்தை கண்டாலும்
மாநிலத்தில்
மனிதத்தை காண்பது நாம்
யாரிடத்தில்
சமகால உலகில்
சமூகப் பரப்பில்
அறிவாற்றல் ஆளுமை
அனைத்தும்தான் கண்டன வளர்ச்சி
மனிதம் மாத்திரம் தான்
வர வர ஏன் தளர்ச்சி
நேயத்தை இப்போது
நேசிப்போர் யாருமில்லை
காயப் படுத்துவோர்தான்
காத்துக் கொண்டிருக்கிறார்கள்
நாம் இங்கே .....
இளமாணி முதுமாணி
...மாறிப்போன மாரி...
நீலத் தாவணி
கட்டியிருக்குது வானம்
நீர்க்கடிதம் எழுதி
மண்ணுக்கனுப்பிடும் காலம்
மார்கழியின் மழையை இன்னும் காணோம்
மாரியினை மறந்தவராய்ப் போனோம்
குளங்களுக்குள்
கணம் வரையிது கோலம் - பனி
கூதலாலே நடு நடுங்குது தேகம்
பயிர்களுக்குப்
பகலிரவாய்த் தாகம் - இதை
பார்த்தும் ஏனோ
பொழியவில்லை மேகம்
காலநிலை
காட்டுகின்ற ஜாலம்
காணவில்லை பதினாறில் நாமும்
ஈரமில்லா
இதயங்களால் தானோ
இந்த நிலைக்காளானோம் நாமும்
வானம் பார்த்த
பூமியெல்லாம் பாவம்
வரளுதடா யாருடைய சாபம்
எம்கரங்கள்
தானிதற்குத் தூபம்
இட்டதை நாம்
ஏற்றால் மழை தூவும்
இறக்காமத்து வானப்பாடி
ஏ.ஆர். பைச
மகன் போல் ஒருத்தனுக்கு,
உழவன் மகனே
உள்ளம் வருந்தாதே
ஊருக்கே சோறிடும் உன்தந்தை
உனக்கு மட்டும் தந்தையல்ல
உண்போர் அனைவருக்கும் தான்
நீ
உழவன் மகன் என்பதாலா
உனை ஒருத்தி வெறுக்கின்றாள்
அரசபணி செய்தும் கூட
மணக்க உன்னை மறுக்கின்றாள்
நாட்டின் தலைவர்களே
உழவன் மகன் என்பதை
உளம்மகிழ்ந்து கூறும்போது
வீட்டின் தலைவிக்கு
விவசாயி மகனென்ற
விலாசம் பிடிக்காததேன்
ஆகாயத்தில் இருந்துதான்
வந்தவளா அந்தவளும்
ஆகாரம் உண்ணாமல்
வாழலாமா எந்தவளும்
விவசாயி பெற்றவனை
விரும்பவில்லை போகட்டும் - அவன்
விளைவிக்கும் ஆகாரம்
விரும்பி உண்பதேன் மட்டும்
என்ன நியாயம்
இது என்னஅநியாயம்
விந்தை உலகில் இன்று...
விவ