அரவிந்த் விஜய் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அரவிந்த் விஜய் |
இடம் | : நாமக்கல் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Jul-2018 |
பார்த்தவர்கள் | : 129 |
புள்ளி | : 3 |
சொன்னா பரியாது
நாம் வாழ அரசியல் பேசி
உலகம்
தான் வாழ அரசியல் பேசுதடா...
அதிகார ஆசையில்
உலகம்
அரபோதையில் அலையுதடா....
கொண்ட கொள்கை மறந்து
உலகம்
கொடி கோட்டை ஏற ஏங்குதடா....
கொள்கை வைத்தது கோட்டை புடித்து
உலகம்
நோட்டை வைத்து ஆட்சி அமைக்குதடா...
சமத்துவம் பேசி வளர்ந்து
உலகம்
ஏற்ற தாழ்வில் வேகுதடா....
நல்ல தலைவன் இன்றி
உலகம்
தாறுமாறாக திரியுதடா...
திருத்த ஒருவன் திருந்த மக்கள்
உலகம் எப்போ மாறுமடா.....
கனவுகள் கூட கலைந்து போகுதே...
காலம் மாறும் போது
நிஜங்கள் கூட கனவாய் போகுதே...
மனம் வாடும் போது
அளவே இல்லா ஓசைகள் அடிக்கடி
லட்சியம் பற்றி சொல்லுதே...
தூக்கம் இல்லா இரவுகள் என்
கனவை நினைத்து ஏங்குதே...
மனம் அடையத் துடிக்கும் எல்லையோ
தூர தூர போகுதே....
தேடி ஓடும் லட்சியம் செல்ல
வழிகள் இன்றி தேங்குதே...
வழி தேடி பிடிக்கும் எண்ணமோ
என் மூச்சாய் பரவி கிடக்குதே...
ஒரு அழகான சமவெளி, அதை சுற்றிலும் அரண் போல் வானுயர்ந்த மலைகள், கிணற்று தவளைகள் போல் வெளி உலகம் தெரியாத, தனக்கு தெரிந்த கலைகளைக் கொண்டு செழிப்புடனும் அன்புடனும்ஒற்றுமையுடனும் கூடி வாழும் மக்கள். விவசாயம் ஒன்றே அவர்கள் செய்யும் தொழில், செழிப்பான பூமி என மகிழ்ச்சியுடன் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்தனர். காலங்கள் பல கடந்து சென்றும், அந்த மலையை தாண்டி வெளியுலக மக்களோடு தொடர்பு கொள்ளாமல் இருந்ததோடு யாரையும் தங்கள் பகுதிகளுக்குள் அனுமதிக்காமலே வாழ்ந்தனர்.