Barathi senthil - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Barathi senthil
இடம்
பிறந்த தேதி :  17-Mar-1984
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Jan-2018
பார்த்தவர்கள்:  30
புள்ளி:  1

என் படைப்புகள்
Barathi senthil செய்திகள்
Barathi senthil - எண்ணம் (public)
02-Mar-2018 1:20 am

மண்னைத் தோண்டி
மனிதனின் 
அறிவை சோதித்தார்கள்.

கீழடியில் கிடைத்தவைகள்
தமிழனை 
இந்தியாவுக்கு எடுத்துச் சொன்னது

கண்டவையும் கேட்டவையும்
தமிழனை பெரிதென்று காட்டியது

நாக்கை ஒரு பாவணையில்
அசைத்துப் பேசுபவனுக்கெல்லாம்
அச்சம் தொற்றிக் கொள்ள

அதே நாக்கை
நாலயிரம் பாவணையில்
பேசும் தமிழன் பெருமையை
ஏற்றுக் கொள்ள
துணிவென்பது வரவில்லை..

நிறுத்தப்பட்டது அகழ்வாரய்ச்சி..

நீங்கலெல்லாம் யாரடா

என் பாட்டனின் அறிவை
சோதித்து 
தமிழனை முடிவெடுத்திட..

இரண்டு வரி 
திருக்குறள் எழுதி வைத்து

அறமும் பொருளும் காமமும்
எடுத்துச் சொல்லி
உலகுக்கு நாங்கள்
கொடுத்த அறிவுரைக்கு ஈடாய் 
ஒரு மொழியில்
காட்ட எது இருக்கின்றது
எங்கள் தமிழை விடுத்து உலகில்?

மேலும்

Barathi senthil - எண்ணம் (public)
02-Mar-2018 1:19 am

நறுக்குனு நாலு கேள்வி..

ஒரு அப்பனுக்கு மகனாய்
பெண்மையை 
கொடுமை செய்துவிட்டு போ
ஒரு பெண்ணுக்கு அப்பனாகும்
சமயத்தில் என்ன செய்வாய்?

ஒரு பணக்காரனாய் விவசாயிகளை
தூக்கில் தொங்கவிட்டு வேடிக்கை பார்
விவசாயி எவனும் இல்லா தேசத்தில்
சோற்றுக்கு என்ன செய்து உயிர் வாழ்வாய்?

பொய் எல்லாம் சொல்லி ஓட்டு வாங்கி
நாட்டை சீரழித்து வாழ்ந்துவிட்டு போ
உன் மகன் அரசியலில் இல்லாத போது
நாடு போடும் வரியை கட்ட என்ன செய்வாய்?

மதத்தை சொல்லி உயிர்களை
பிணக்குவியலாய் மாற்றிவிட்டுப் போ
மடிந்து நீ போகும் போது
உன் மதக கடவுளே நீ தவறு செய்தாய்
என்று சொல்லி நரகத்துக்கனுபினால்
நீ எந்த மதம் என்று சொல்லி ஏமாற்றுவாய்?

மேலும்

அருமை...... 03-Mar-2018 3:00 pm
Barathi senthil - எண்ணம் (public)
02-Mar-2018 1:19 am

வெள்ளி செய்வாய்களில்
கோவில் எங்கும் கூட்டம்..
சிலைகளுக்கு அன்று 
பாலில் தான் அபிசேகம்..

சாப்பிட என் தேசத்து
பிள்ளைகளுக்குச்
சோறென்பது இங்கு இல்லை
உங்கள் பஞ்ச மாதவுக்கு
பாலபிசேகம்
என்ன தான் கொள்ளை..

வெள்ளி மதியம் எங்கும்
மசுதிகளில் ஒரு சேர தொழுகை
உங்கள் பிரார்தனைகளில்
நாடு வளம் பெற்றதா இல்லவே இல்லை

ஞாயிறு ஆனால் போதும்
சர்ச்சுக்களில் எல்லாம்
அருள் போதனை கூட்டம்

உங்கள் ஏசு நாதர் வந்து
உங்களுக்குத் தான் 
இட ஒதுக்கீடு வாங்கித் தந்தாரா
உண்மையை சொல்ல எவருமில்லை..

மதங்களை  தூரத்தில் வைப்போம்
மனிதர்களில் ஒரு கருணையை 
வெளிப்படுத்திக் காட்டிடுவோம்..

காசை காகிதமாய் பார்ப்போம்
கல்வியை அனைவருக்கும்
இலவசமாய் கொடுத்திட
ஒன்று சேர்ந்து எதிர்த்துப் போராடுவோம்

செத்தால் வீசும் உடலென்று உணருவோம்
சாகாமல் உயிர் காக்க
மருத்துவமனை 
மலிவு விலையில் செய்து கொடுப்போம்

இருக்கும் வரை 
மனிதனை மனிதன் மதித்திடுவோம்..
நம் இறந்து போனால்
மதங்கடந்து அனைவரும்
அனுதாபபட நல்வாழ்வு வாழ்ந்திடுவோம்

முகனோ அல்லாவோ ஏசுவோ
இதைச் செய்யாமல் நீ செத்துப் போனால்
உன்னை நரகத்துக்கே போகச் சொல்வார்
.

மேலும்

Barathi senthil - எண்ணம் (public)
02-Mar-2018 1:18 am

நிதானம் என்பதெல்லாம்
விட்டு நீண்ட தூரம் போனது

கனா கண்ட வாழ்கை
இன்றெல்லாம் 
இல்லாமல் இங்கே ஆனது..

புராணத்து தமிழ் வாழ்வை
யோசிக்கும் போது
பேசாமல் பிரிட்டனே கூட
நம்மை ஆண்டால் என்ன
என்று தான் தோணுது..

காமராஜரோடு கல்வியும்
கக்கனோடு அரசியலும்
கலைஞரோடு தமிழும்
அம்மாவோடு வீரமும்
செத்துத் தான் போனது..

ஈனப் பிறப்பென்று
தமிழனை நாடே நினைக்குது
இந்த நிலமை நெஞ்சோடு
ஆயிரம் ஈட்டிகளை
ஒரு சேர எடுத்து வீசுது..

மானிலம் காக்க 
நாமெல்லாம் 
என்ன செய்ய போகிறோம்?

நம் மௌனம் 
கரிகால சோழனையும்
கட்ட பொம்மனையும்
பெரிதும் பாதிக்கிறது..

உலகத்தின் மூத்த குடி
நம் தமிழ் குடி..
இன்னும் நாம் அடங்கி
கிடப்பதெல்லாம்
துயரத்திலும் பெரும் துயரமடி

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே