Paapu - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/jmltx_36835.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Paapu |
இடம் | : |
பிறந்த தேதி | : 12-Jul-1997 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-May-2016 |
பார்த்தவர்கள் | : 49 |
புள்ளி | : 10 |
ஒருவரைப் பிரியப்போகிறோம்
என்று நினைக்கும் போது
வரும்
கண்ணீரை விட....
ஒருவரைப் பிரியக்கூடாது
என்று நினைக்கும் போது
வரும்
கண்ணீருக்கே வலி அதிகம்....!
இரவில் ரம்மியமாய்
ஒளிரூட்டும் நிலா !
துயிலெழுப்பும் அலாரமாய்
சேவலின் கூவல் !
பகலில் பிரகாசமாய்
பரவசமூட்டும் பகலவன் !
அழையா விருந்தினராய்
மலர்ந்திருக்கும் பூக்கள் !
இனிய கீதமாய்
பறவைகளின் கூச்சல் !
குளிர்ச்சியூட்டும் விசிறியாய்
குளிரவைக்கும் கார்முகில் !
வானின் முத்துக்களாய்
மண்ணில் விழும் மழைத்துளி !
ஒளிர்ந்த வண்ணமாய்
வர்ணஜாலம் காட்டும் வானவில் !
கடலின் குதூகலமாய்
ஆர்ப்பரிக்கும் அலைகள் !
சில்லென்ற தென்றலாய்
தவழவைக்கும் காற்று !
பச்சை கம்பளமாய்
படர்ந்திருக்கும் வயல்வெளி !
இறைவனின் தோட்டமாய்
அழகூட்டும் காடுகள் !
வியப்பின் உச்சமாய்
பிர
புத்தம்புது வாழ்க்கையின்
இனியதோர் துவக்கம் !
மகிழ்ச்சியின் வாசல்படி – இது
சொர்கத்தின் முதல்படி !
நம்பிக்கையைத் தூண்டும்
நண்பர்களின் வருகை...
இனிய அனுபவங்களுக்கு
சொந்தமான இடம் – இது
இனிமையைக் கொடுக்கும் இடம் !
நேசத்தால் ஆனந்த கண்ணீர் கடலில்
அனைவரையும் மூழ்கடிக்கும்
ஓர் உன்னத இடம் !
பிரிந்த பின்பும்
பல இனிய நினைவுகளை
சுமந்து கொண்டிருக்கும்
ஓர் தாய் மடி…!!!
’அன்பு’ என்னும் வார்த்தையை
அறிந்து கொண்டேன்
அன்னையிடம் !
’அரவணைப்பு’ என்னும் வார்த்தையை
கற்றுக் கொண்டேன்
தந்தையிடம் !
’கல்வி’ என்னும் வார்த்தையை
ஆவலுடன் அறிந்தேன்
ஆசிரியரிடம் !
’நேசம்’ என்னும் வார்த்தையை
நேரில் கண்டேன்
நேசமான உறவுகளிடம் !
’சந்தோஷம்’ என்னும் வார்த்தையை
சந்திக்க நேர்ந்தேன்
சகோதரியிடம் !
’பாசம்’ என்னும் வார்த்தையை
அருகில் கண்டேன்
அண்ணணிடம் !
ஆனால்.....
இவ்வனைத்து வார்த்தைகளையும்
தெரிந்து கொண்டேன்
”நட்பு” என்னும் அகராதியில்.....!!!