Ranjith Vasu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ranjith Vasu
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-May-2019
பார்த்தவர்கள்:  1027
புள்ளி:  7

என் படைப்புகள்
Ranjith Vasu செய்திகள்
Ranjith Vasu - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2019 11:07 am

பிறப்பை கடவுள் தீர்மானித்தான்
இறப்பை மனிதன் தீர்மானித்துக்கொண்டான் ...

கவலைகளை கொஞ்சமாய் மறக்க
கல்லறையை முழுதாய் அரவணைத்தான் ...

சூழ்நிலையை காரணம் காட்டி
சுயநிலையை இவன் இழந்தான் ...

சிறு பொழுது மகிழ்ச்சிக்காக
சில்லறைகளை வீசி எறிந்தான் ...

மனதை மயக்கும் புகையிலையில்
வாழ்வை மறைத்து வைத்தான் ...

சுற்றத்தாருக்கும் நோய் தந்து
புகைக்காமல் புகைய செய்தான் ...

புகையிலையின் துணிக்கைகளை
மரணத்திற்கு காணிக்கையாக்கினான் ..

கைபிடித்து நடக்க
குழந்தை அங்கே காத்திருக்க
இவனோ
புகைபிடித்து நடக்கிறான்
குழந்தையை மறந்து ...

உனக்கு என்னை

மேலும்

Ranjith Vasu - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2019 2:24 pm

கார்மேக தோட்டத்து கண்ணாடி பூ ...
இழை நிற அந்தி பொழுது ...
அழகிய மாலை பொழுது ...
என இயற்கையின் மேல்
அலைபாய்ந்த என் கற்பனைகள் அனைத்தும்

ஒற்றை நொடியில் காணாமல் போனது
குழல் வழி நுழைந்த
காற்று போன்ற உன் சிரிப்பில் ..!!

சூரிய கதிர் பட்டு கரையும்
பனித்துளிபோல் உருகுகிறேன் ..
உன் பிஞ்சு கைவிரல்கள்
பஞ்சு பூவிதழாய்
நெஞ்சை தழுவையில்

நீ தூங்கும் அழகில்
என் உறக்கம் மறந்தேன் ..
நீ உண்ணும் அழகில்
என் பசியை மறந்தேன் ..

நீ சிரிக்கும் சிரிப்பில்
என் கவலை மறந்தேன் ..
நீ பேசும் பேச்சில்
நான் என்னையே மறந்தேன் ..

அழகிற்கு அழகு உ

மேலும்

Ranjith Vasu - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2019 5:09 pm

துவங்கியது தேர்தல் வேட்டை
சிறிய மீனை போட்டு
பெரிய மீனை பிடிக்கும்
ஜாலக்காரர்களின் அற்புத வேட்டை

ரூபாயில் ஆசை காட்டி
கோடியில் வாழ துடிக்கும்
பேராசைக்காரர்களின்
வேட்டை துவங்கியது

அரசியல் பிழைத்தோருக்கு
அறம் கூற்றாகும் என்பார்கள்
இங்கே அறத்தினை அழித்தவனே
அரசியலில் பிழைக்கின்றான்

பகுத்தறிவை கையில் எடுத்தார்கள்
நமக்கும் சேர்த்து அவர்களே சிந்தித்தார்கள்
நம்மை சிந்திக்க விடாமல் வைத்திருப்பது தான் பகுத்தறிவோ

இங்கே பகுத்தறிவு தூண்டபடவில்லை
அழிக்கப்படுகிறது


தூக்கி எறியப்படும் ரூபாய் நோட்டுகளில்
மற

மேலும்

Ranjith Vasu - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2019 2:12 pm

இருள் சூழ்ந்த போதும்
என்னுள் பயம் ஏதும் இல்லை,

விழி திறக்கா விடினும்
மனதில் வலி ஏதும் இல்லை .

நகர முடியா இடத்திலும்
சிம்மாசனத்தில் இருப்பதுபோல் ஓர் உணர்வு ,

அவ்வப்போது
சிறு சிரிப்பு சத்தம் கேட்பதுண்டு ..

சிரிப்பு சத்தத்தின் மகிழ்ச்சியால்
துள்ளி குதித்தால்
யாரோ வலி கொண்டு துடிப்பது போல்
ஓர் உணர்வு

உறவாட யாரும் இல்லா போதும்
செவிகளில் கேட்கும் வார்த்தைகள்

அன்பே கண்ணே என
அழைக்கும் சத்தம்

இதுவரை காணாத
வாசம் ..


இது தான் கருவறையோ ..

பிறப்பவன் இங்கே
மகிழ்சியாய் இருக்கையில்
சுமப்பவள் அங்கே

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே