சாந்தீஸ்வரி ராஜாங்கம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சாந்தீஸ்வரி ராஜாங்கம்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  18-Jan-1983
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-May-2022
பார்த்தவர்கள்:  176
புள்ளி:  12

என் படைப்புகள்
சாந்தீஸ்வரி ராஜாங்கம் செய்திகள்
சாந்தீஸ்வரி ராஜாங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2022 10:15 am

பள்ளிக்கூட நாட்கள்

பள்ளிக்கூட நினைவுகள்
பாடம் கற்ற தருணங்கள்
பரவசம் தரும் உணர்வுகள்
வார்த்தையில் அடங்காத வரிகளாக
வர்ணிக்க முடியாத வார்த்தைகளாக
வசந்த கால நிகழ்வுகளாக
என்றும் நம் உள்ளத்தில்
நீங்காத நினைவலைகளாக.....

சூரியனின் வெப்பம் மறந்து
சுடு மண்ணில் சுகம் கண்டோம்...
பகலவனின் பரிகாசத்தில்
பட்டாம்பூச்சியாய் பறந்திருந்தோம்...
பல வீட்டு சமபந்தி விருந்தில்
பகிர்ந்து உண்ணும் கலை அறிந்தோம்....

ஆலமரத்தின் விழுதுகள் ஏறி
ஆகாயம் தொட முயற்சி செய்தோம்...
ஒற்றை கீத்து மாங்காயில் ஒற்றுமையை உணர்த்திட்டோம்...
உயர்வு தாழ்வு நிலையற்று
உன்னதமாய் உறவு கொண்டோம்....

வகுப்பறையில

மேலும்

https://youtu.be/wCgjWgRENOY


பள்ளிக்கூட நாட்கள்

பள்ளிக்கூட நினைவுகள் 
பாடம் கற்ற தருணங்கள் 
பரவசம் தரும் உணர்வுகள் 
வார்த்தையில் அடங்காத வரிகளாக 
வர்ணிக்க முடியாத வார்த்தைகளாக 
வசந்த கால நிகழ்வுகளாக 
என்றும் நம் உள்ளத்தில்
நீங்காத நினைவலைகளாக.....

சூரியனின் வெப்பம் மறந்து
சுடு மண்ணில் சுகம் கண்டோம்... 
பகலவனின் பரிகாசத்தில் 
பட்டாம்பூச்சியாய் பறந்திருந்தோம்... 
பல வீட்டு சமபந்தி விருந்தில்
பகிர்ந்து உண்ணும் கலை அறிந்தோம்....

ஆலமரத்தின் விழுதுகள் ஏறி
ஆகாயம் தொட முயற்சி செய்தோம்...
ஒற்றை கீத்து மாங்காயில் ஒற்றுமையை உணர்த்திட்டோம்...
உயர்வு தாழ்வு நிலையற்று 
உன்னதமாய் உறவு கொண்டோம்....

வகுப்பறையில் அரட்டையடித்து 
வாத்தியாரை அலற வைத்தோம்...
வெட்கங்களை துறந்து விட்டு 
வேடிக்கையாய் கதை படித்தோம்...
வான் மழையின் தூறல்களில் 
வண்ண மயிலாய் வட்டமடித்தோம்....

புத்தகப்பையின் சுமை மறந்து புயல் காற்றுடன் பந்தயம் வைத்தோம்....
மணிக்கணக்கில் கதை பேசி
மனக்கணக்கை காற்றில் விட்டோம்....
சிரிப்பலைகளின் சிதறல்களில் 
சித்தம் கலங்கி களித்திருந்தோம்....

பூவா தலையா போட்டுப்பார்த்து
புதிருக்கான விடை கண்டோம்...
பேனா தந்தால் பிரிவு வருமென 
பேதமையில் திளைந்திருந்தோம்...
அலைபேசி இல்லா காலத்திலும் 
ஆழ்மனதில் முகவரி சேமித்தோம்....

மதிப்பெண்களை மறந்து விட்டு
மகிழ்ச்சியாக கல்வி கற்றோம்...
பரீட்சைகளை தவற விட்டு
பகுத்தறிவில் தேர்ச்சி பெற்றோம்...
கற்பித்த ஆசிரியரை 
காலத்திற்கும் நினைத்திருந்தோம்.....

உணர்வுகளின் உள்ளக்கிடங்காக... 
நினைவுகளின் நெஞ்சக்குவியலாக... 
மறக்க முடியாத மகிழ்வுப்பெட்டகமாக... 
மரணம் வரை உயிர்த்துடிப்பாக... 
நம் வாழ்வின் நீங்கா நினைவலைகளாக...
நம் பள்ளிக்கூட நாட்கள்......

            -சாந்தீஸ்வரி ராஜாங்கம்

மேலும்

சாந்தீஸ்வரி ராஜாங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2022 2:00 pm

கண்ணதாசனுக்கு சமர்ப்பணம்

கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே
என்று ஆரம்பித்த கலைப்பயணம்....
கண் மூடும் வேளையிலும்
கலை ஒன்றே உயிராக
உள்ளத்தில் நல்ல உள்ளமாக
உலகம் பிறந்தது எனக்காக என்று தொடங்கினேன்......

காதலிக்க நேரமில்லை என்றவனை
கல்லிலே கலை வண்ணம் காண வைத்து
கண்களின் வார்த்தைகளை அறிய வைத்து
காதல் சிறகை காற்றினில் விரித்தாய்....

நீரோடும் வைகையில்
நான் மலரோடு தனியாக நிற்கும் வேளையில்
நிலவென்னும் ஆடை கொண்டவள்
நடையா இது நடையா என நடை போட்டு
நெஞ்சத்திலே நீ என்னுள் வந்தாய்.....

என்னருகே நீ இருக்கும் பொழுதில்
மௌனமே பார்வையாக
மயக்கமா கலக்கமா என தெரியாமல்

மேலும்

சாந்தீஸ்வரி ராஜாங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2022 1:57 pm

அவள் அப்படித்தான்

விடியும் முன் எழுவாள்
விடியலாய் ஒளிர்வாள்
விதியோடு விளையாடி
விதிவிலக்காக வாழ்வாள்
வீரத்தோடு போராடி
தாரகையாக மிளிர்வாள்
சரித்திரத்தின் பக்கங்களில்
சாதனை படைக்கும் சக்தி அவள்....
அவள் அப்படித்தான்...

கடமையே கண்களாக
தடைகளை தகர்ப்பவளாக
உடலில் மென்மையாக
உள்ளத்தில் உறுதியாக
உழைப்பினில் உண்மையாக
உயர்வினில் உறுதுணையாக உலகை வெல்லும் துணிவானவள் அவள்....
அவள் அப்படித்தான்...

ஆறுதலில் தாயாக
அரவணைப்பில் சேயாக
அர்ப்பணிப்பில் மனைவியாக
அனுசரிப்பில் மருமகளாக
பொறுமையின் சிகரமாக
போராடுவதில் போராளியாக
தியாகத்தின் தலைமகள் அவள்....
அவள் அப்படித்தான்....

அவ

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே