Theanmozhiyan Mohankannayan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Theanmozhiyan Mohankannayan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-May-2015 |
பார்த்தவர்கள் | : 21 |
புள்ளி | : 2 |
பெற்றவளே நானுந்தன் பெருமையினை சொல்லவில்லை
கற்கவில்லை உனதன்பில் கருதரித்து வந்ததம்மா!
கருவாகி வந்தமுதல் கைகால்கள் முளைத்தமுதல்
உருகொண்டு உயிர்கொண்ட உலகாளும் தெய்வமென
இருவிழியின் நீர்விட்டு இதயத்தால் பூசித்து
நறுமணமாய் வீசுகிறேன் நாளுமுனை பேசுகிறேன்!
வயிற்றில் சுமந்தபோதும் வலியோடு துடித்தபோதும்
இயலாமல் அழுதபோதும் இன்பமென்று சொன்னவளே!
உனதரிய துடிதுடிப்பை ஒருபோதும் நானறியேன்!
இனிதின்பம் என்றவளே எப்படிதான் பொறுத்தாயோ!
அன்பென்னில் பொழிவதற்கா அத்தனையும் நீ!பொறுத்தாய்!
எனையிங்கு ஈன்றெடுக்க இரண்டாயிரம் பிறப்பெடுத்தாய்!
பட்டினியாய் கிடந்தபோதும் பழஞ்சோறு திண்ணபோதும்
பட்டணத்து அரசனைப்போல் பா
கணிகைகுலம் பெற்றெடுத்த கண்ணகியே! காவியமாய்
மணிமேன்மை கலைதன்னை மடியினிலே ஈன்றவளே!
மாதவிநீ! ஒழுக்கத்தின் மகுடமாய் நின்றபோதும்
பாதகிநீ என்றுன்னை பழிசுமத்தச் செய்துவிட்டாய்!
படிதாண்டாப் பத்தினிதான் பழிக்கவில்லை; கண்ணகியின்
குடிகெடுத்தக் குற்றம்தான் குத்தியது நெஞ்சுக்குள்!
நடனத்தைக் காணவந்து நடுசபையில் உனைக்காக்க
மடையொத்த மனம்தாண்டி மதியிழந்து உன்னழகில்
மாசத்துவன் பெற்றமகன் மயங்கிவரும் வேளையிலே
பேசத்தான் மறந்துவிட்டாய்! பேச்சினிலே மயங்கிவிட்டாய்!
கொஞ்சுவது தவறென்றும் குலவுவது பிழையென்றும்
நெஞ்சத்தில் அறிந்தாலும் நிலைமறந்து கண்ணகியின்
மஞ்சத்தை அபகரித்தாய்; மலர்விழிகள் கண்ணீரில்
துஞ்சுவத