சாமி எழிலன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சாமி எழிலன் |
இடம் | : தர்மபுரி |
பிறந்த தேதி | : 02-May-1963 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 2 |
ஆங்கில துறை பேராசிரியர்
நல்ல மேய்ப்பள்
மெய்வருந்த
மேய்ப்பவள்
ஊழ்வினைப்பற்றி
அறியாள்.
நடப்பனவற்றின்
பசியறிந்து
புல்லூட்டி
மகிழ்வாள்.
பள்ளிப்பக்கம்
போகாதவளுக்கு
புல்லினத்தின்
மொழியும்
தெரியும்...
நச்சு
ஊர்வனவற்றிலிருந்து
காக்கவும்
தெரியும்.
நாடோடி என
உலகம்
விளித்து
விரட்டினாலும்
தோளோடு
தோழனையும்
தோழியையும்
அணைத்து மகிழும்
இவளுமொரு
நல்ல
மேய்ப்பளே.
- எழில்
தாய்மரம்
பூவையின்
விழிகளில்
வழியும்
விழிநீர்
மூச்சுக்காற்றின்
தணலில்
தகிக்கிறது.
வேரோடு
சாய்க்கப்பட்ட
மரங்கள்
விதைக்கப்படும்
நாட்டில்
இல்லவாசல்களுக்குத்
தான்
விசாலம்.
இளமகளிரின்
இதயவாசல்களுக்கு
என்றும்
இறுக்கம்.
அலுவலகக்
கோப்புகள்
மட்டுமா
கட்டிவைக்கப்பட்டுள்ளன?
வளையல்களும்
தான்.
சூறாவளிகளுக்கு
தாக்குப்பிடிக்காத
மரங்கள்
சாயலாம்.
சாய்ந்த
மனிதர்களை
சுமப்பது
சுமைதாங்கிகள்
மட்டும்.
மரம்
தாயாவதும்
தாய்
மரமாவதும்
வரம்.
-எழில்
08 03 2024
தாய்மரம்
பூவையின்
விழிகளில்
வழியும்
விழிநீர்
மூச்சுக்காற்றின்
தணலில்
தகிக்கிறது.
வேரோடு
சாய்க்கப்பட்ட
மரங்கள்
விதைக்கப்படும்
நாட்டில்
இல்லவாசல்களுக்குத்
தான்
விசாலம்.
இளமகளிரின்
இதயவாசல்களுக்கு
என்றும்
இறுக்கம்.
அலுவலகக்
கோப்புகள்
மட்டுமா
கட்டிவைக்கப்பட்டுள்ளன?
வளையல்களும்
தான்.
சூறாவளிகளுக்கு
தாக்குப்பிடிக்காத
மரங்கள்
சாயலாம்.
சாய்ந்த
மனிதர்களை
சுமப்பது
சுமைதாங்கிகள்
மட்டும்.
மரம்
தாயாவதும்
தாய்
மரமாவதும்
வரம்.
-எழில்
08 03 2024